கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை- ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்த திருமாவளவன்!
டெல்லி: கச்சத்தீவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; இந்த சிலையை அகற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. 1970களில் மத்திய அரசு தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. இருந்த போதும் கச்சத்தீவு மீதான தமிழ்நாட்டு தமிழர்களின் அனுபவ உரிமையை அங்கீகரிக்கும் ஒப்பந்தமும் உருவானது. ஆனால் இந்த உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. கச்சத்தீவு பகுதிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் சென்றாலே இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வதும் தாக்குவதுமான போக்கை கடைபிடிக்கிறது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலா திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் கச்சத்தீவில் திடீரென இலங்கை கடற்படை புத்த விகாரையை கட்டி இருக்கிறது. இந்த புத்த விகாரை ரகசியமாக கட்டப்பட்டிருப்பது அம்பலமானது. இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கச்சத்தீவில் ஏற்கனவே அந்தோணியார் தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புத்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது மத மோதல்களை ஏற்படுத்தும் என்பது தலைவர்களின் கருத்து. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் தமிழ்நாட்டு தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான மனு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது: சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போதுவரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர். இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications