நாடு முழுக்க சோலார் பேனல்.. விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!
விவசாயிகளுக்காக நாடு முழுக்க அவர்கள் பயன்படுத்தும் நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: விவசாயிகளுக்காக நாடு முழுக்க அவர்கள் பயன்படுத்தும் நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும், இலவசமாக இந்த சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
விவசாயத்துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை கொண்டு வருகிறோம். இந்த 16 அம்ச திட்டங்கள் மூலம் விவசாய துறை முன்னேறும். இந்தியா முழுக்க 100 மாவட்டங்களில் நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டு வரப்படும்.
விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவதற்காக கடுமையாக முயற்சி செய்துவருகிறது 2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"பூமி திருத்தி உண்"- பட்ஜெட் உரையில் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் நீர் மேலாண்மையை மேம்படுத்த திட்டம். மீன் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
விவசாய துறை, அது தொடர்பான செயல்பாடுகள், நீர் மேலாண்மை, கிராமப்புற மேம்பாடு அனைத்தும் சேர்த்தும் 2.83 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். 2020-2021ல் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மிக முக்கியமாக விவசாயிகளுக்காக நாடு முழுக்க அவர்கள் பயன்படுத்த நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும். இலவசமாக இந்த சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும். இதன் மூலம் உருவாக்கப்படும் மின்சாரம் இலவசமாக, விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.