Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் லண்டன் பேச்சு & அதானி விவகாரம்! 7ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்! நாள் முழுக்க ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு நடைபெற்று வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 7ஆம் நாள் இன்று கூடியது. அவையில் அமளி ஏற்பட்ட நிலையில், இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜன.31ஆம் தேதி நாடாளுமன்ற தொடர் ஆரம்பித்தது. முதலில் பொருளாதார ஆய்வறிக்கையும் அதன் பிறகு பட்ஜெட்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

 பட்ஜெட் கூட்டத்தொடர்

பட்ஜெட் கூட்டத்தொடர்

இரு அமர்வுகளாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதில், முதல் அமர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை இரண்டாம் அமர்வு தொடங்கியது. இரண்டாம் அமர்வு தொடங்கியதில் இருந்தே இதுவரை அவை நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியே வருகிறது. ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை ஆளும் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

 ராகுல் லண்டன் பேச்சு

ராகுல் லண்டன் பேச்சு

தனது பாரத் ஜாடோ யாத்திரையை முடித்துவிட்டு பிரிட்டன் சென்ற ராகுல் காந்தி அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன் நாடாளுமன்றங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாக விமர்சித்திருந்தார். ஆளும் தரப்பு மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்த நிலையில், இந்த விஷயத்தைத் தான் பாஜக கையில் எடுத்துள்ளது. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை பாஜக வலியுறுத்தி வருகிறது.

விளக்கம்

விளக்கம்

நாடாளுமன்றத்தில் தனக்குப் பேச வாய்ப்பளித்தால் தனது பேச்சு குறித்து விளக்குவேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இருப்பினும், மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தரப்பில் கூறுகின்றனர். ராகுல் காந்தியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதையும் பாஜக வலியுறுத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு குறித்து விளக்கியிருந்தார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

இன்று என்ன நடக்கும் ஆளும் தரப்பு ராகுல் விவகாரத்தை எடுத்துள்ளது என்றால், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. அதானி குறித்து வெளியான அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் பெற்ற கடன் விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதை விடுவதாக இல்லை. இந்தச் சூழலில் 6ஆவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடியது.

நாள் முழுக்க ஒத்திவைப்பு

நாள் முழுக்க ஒத்திவைப்பு

அப்போது எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அதானி விவகாரத்தைக் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போதும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபா என்று இரண்டும் நாள் முழுக்க ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை விடுமுறை தினம் என்பதால் அடுத்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 11 மணிக்குக் கூடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+