”ஜிஎஸ்டி” வரி பயங்கரவாதத்தை ஏவிவிட்டுள்ளது மத்திய பாஜக அரசு- லோக்சபாவில் ராகுல் காந்தி கடும் தாக்கு!
டெல்லி: ஜிஎஸ்டி என்கிற வரி பயங்கரவாதத்தை மத்திய பாஜக அரசு ஏவிவிட்டுள்ளது; ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம் என்று லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். மத்திய பட்ஜெட்டானது பெரும் முதலாளிக்கானதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்தியா முழுவதும் ஒருவித அச்சநிலை நிலவுகிறது; மத்திய அமைச்சர்களும் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் என்றும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசினார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி இன்று பேசியதாவது: மகாபாரதத்தில் 6 பேர் சக்கர வியூகத்தை அமைத்து கட்டுப்படுத்தினர். தற்போதும் நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி என 6 பேரின் சக்கரவியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது (அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா குறுக்கிட்டு அம்பானி ,அதானி, அஜித் தோவல் சபை குறிப்பில் இடம்பெறாது; இதர 3 பேரின் பெயர் மட்டும் இடம் பெறும் என்றார். இதனால் அம்பானி, அதானி பெயரை A1, A2 என ராகுல் காந்தி குறிப்பிட்டார்). இந்தியாவில் தாமரை வடிவத்தில் சக்கரவியூகம் அமைந்துள்ளது. இந்த சக்கரவியூகத்தால் மாநில அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. பாஜகவின் இந்த சக்கர வியூகத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இந்த சக்கரவியூகத்தை நிச்சயம் நாங்கள் தகர்த்து எறிவோம்.

அச்சத்தில் மத்திய அமைச்சர்கள்: நாட்டின் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருவித அச்சத்தில் உள்ளனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக நினைத்தாலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். மத்திய பட்ஜெட்டானது பெருமுதலாளிக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை என்பதை மோடி அரசானது வினாத்தாள் கசிவு என்பதாகிவிட்டது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குகிறது.
ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம்: ஜிஎஸ்டி என்கிற வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு ஏவிவிட்டது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டுவிட்டன. ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது.
கல்விக்கு நிதி எங்கே?: 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கல்விக்கு குறைவாக நிதி ஒதுக்கபட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் விவசாயிகலை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க மறுக்கிறது மத்திய அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டமாக்க தவறிவிட்டது மத்திய பாஜக அரசு. இந்தியா கூட்டணி ஆட்சியில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவருவோம்.
முதுகில் குத்திய மத்திய அரசு: மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை. நடுத்தர மக்களின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு. அக்னிபாத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த நீட் தேர்வு தொடர்பாக ஒருவார்த்தை கூட மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவும் இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
பாஜக தொடர் அமளி: ராகுல் காந்தி பேசும் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். அதானி, அம்பானி பெயரை குறிப்பிடவும் பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் போது பாஜக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் ராகுல் காந்தி பேச்சின் போது குறுக்கிட்டார். இதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது குறுக்கிடும் சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது குறுக்கிடுவதில்லை என காங்கிரஸ் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications