குடியுரிமை சட்ட திருத்தம் எந்த மதத்தினர் குடியுரிமையையும் பறிக்காது.. மோடி, அமித்ஷா மீண்டும் உறுதி
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தம் எந்த மதத்தினது குடியுரிமையையும் பறிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, நரேந்திர மோடி இதுகுறித்து பேசியதாவது:
இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன், CAA சட்டம் என்பது எந்த மதத்தை சேர்ந்த எந்தவொரு நபரின் குடியுரிமையையும் பாதிக்காது. காங்கிரஸ் பொய்களை பரப்புகிறார்கள், வன்முறையை பரப்புகிறார்கள். அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் முஸ்லிம்களை தூண்டுகிறது.

காங்கிரஸின் கைகளில் விளையாட்டு பொம்மைகளாகிவிடாதீர்கள் என்று, மாணவர்களிடம் கோரிக்கைவிடுக்கிறேன். உங்கள் முக்கியத்துவத்தையும் நிறுவனங்களையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு முடிவுகள் விவாதிக்கப்பட வேண்டும், ஜனநாயக முறையில் குரல் எழுப்ப வேண்டும், இந்த அரசு உங்கள் கவலைகளைப் புரிந்துகொள்கிறது. நகர்ப்புற நக்சல்கள் துப்பாக்கியை சுடுவதற்கு உங்கள் தோள்பட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதேபோல அமித் ஷா இன்று தனது உரையின்போது, எதிர்க்கட்சிகள்தான் பொய்யை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். நாட்டிலுள்ள யாருடைய குடியுரிமையையும், இந்த சட்டம் பறிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications