பிரதமர் மோடி அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு- 7 பேர் புதுமுகங்கள்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7 பேர் புதுமுகங்கள்.
மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா செருதா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். நிர்மலா சீதாராமனும் ஸ்மிருதி இரானியும் கேபினட் அமைச்சர்கள். சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா செருதா இருவரும் இணை அமைச்சர்கள்.
இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 இணை அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 36 பேர் புதுமுகங்களும் அமைச்சரவையில் இடம்பெற்றனர். புதுமுகங்கள் 36 பேரில் 7 பேர் பெண்கள். இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. புதியதாக பதவியேற்ற 7 பெண்கள் அமைச்சர்கள் விவரம்:

அப்னா தள் அனுபிரியா படேல்
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக 2 முறை வெற்றி பெற்றவர். பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள் கட்சித் தலைவராக உள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராக உள்ளார். பிரதமர் மோடியின் முந்தைய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

கர்நாடகாவின் சோபா கரந்த்லஜே
கர்நாடகாவின் உடுப்பி-சிக்மகளூர் தொகுதி எம்.பி. 2 முறை லோக்சபா எம்.பி.யாக வென்றவர். கர்நாடகா எம்.எல்.ஏ., எம்.எல்.சி.யாகவும் இருந்துள்ளார். கர்நாடகாவின் மின்சாரத்துறை, ஊரக மேம்பாடு மற்றும் உணவு, பொதுவிநியோகத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சோபா கரந்த்லஜே. தற்போது மத்திய வேளாண் துறை, குடும்ப நலன் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் தர்ஷனா ஜர்தோஸ்
குஜராத்தின் சூரத் லோக்சபா தொகுதியில் இருந்து 3 முறை வென்றவர் தர்ஷனா ஜர்தோஸ். சூரத் மாநகராட்சி கவுன்சிலராகவும் குஜராத் சமூக நலத்துறை உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி மீனாக்ஷி லேகி
டெல்லியில் இருந்து 2வது முறை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீனாக்ஷி லேகி. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர். வெளியுறவுத் துறை மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஜார்க்கண்ட் அன்னபூர்னா தேவி
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அன்னபூர்னா தேவி, 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடர்மா லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார். ஜார்க்கண்ட் மாநில அமைச்சராகவும் இருந்தவர். தற்போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திரிபுராவின் பிரதிமா பௌமிக்
திரிபுரா எம்.பி.யான பிரதிமா பௌமிக், சமூக நீதித்துறை இணை அமைச்சராகி உள்ளார். திரிபுராவைச் சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

மகாராஷ்டிராவின் பாரதி பவார்
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் டாக்டர் பாரதி பவார். முதல் முறையாக லோக்சபா எம்.பி.யாகி உள்ளார். நாசிக் ஜில்லா பரிஷத் உறுப்பினராகவும் இருந்தவர். சுகாதாரம், குடும்ப நலன் துறை இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications