ஆண்டவன் பெயரால் கொள்ளை- அயோத்தி மேம்பாட்டு திட்டம்- ஆட்டைய போட்ட ஒப்பந்ததாரர்கள்- அம்பலமாக்கிய சிஏஜி
டெல்லி: மத்திய அரசின் சுதேஷ் தர்ஷன் எனும் திட்டத்தின் கீழ் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கொள்ளப்படும் அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்தகாரர்கள் கொள்ளையடித்து வரும் முறைகேடுகளை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை அம்பலபடுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராமாயண நிகழ்வுகள் தொடர்புடைய இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது அயோத்தி மேம்பாட்டுத் திட்டம். ராமாயண கதை காட்சிகள், பூங்கா, சரயு நதிக்கரையில் ராமாயணம் தொடர்பான படித்துறைகள், லட்சுமணன் பாதை மேம்பாடு, அயோத்யா சாலை விரிவாக்கம், துளசிதாஸ் தோட்டம் விரிவாக்கம் என பல பணிகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை (சிஏஜி) புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சிஏஜி அறிக்கையில் இடம்பெற்ற அயோத்தி மேம்பாட்டு திட்ட முறைகேடு தொடர்பான விவரங்கள்: 6 மாநிலங்களில் 6 பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பந்தாரர்கள் ரூ19.73 கோடி அளவில் முறைகேடாக ஆதாயம் அடைந்துள்ளனர். கோவா சின்குவேரிம்-அகுவாடா சிறை மேம்பாடு, இமாச்சல பிரதேசம் இமாலயன் சர்க்யூட், தெலுங்கானா ஹெரிட்டேஜ் சர்க்யூட், சிக்கிம் மாநிலத்தின் ரங்போ-சிங்டம், மத்திய பிரதேசத்தின் புத்த சர்க்யூட் ஆகியவை இதில் உள்ளடங்கும்.
மேலும் ஒவ்வொரு ஒப்பந்தாரர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தொகையில் குறிப்பிட்ட அளவு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஆனால் அப்படி சட்டப்பூர்வமான உத்த்ரவாதத்தை விட குறைந்த அளவுதான் கொடுத்திருக்கின்றனர். உதாரணமாக ரூ62.17 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் உத்தரவாத தொகை ரூ3.11 கோடி அளிக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ1.86 கோடி மட்டுமே கொடுத்த ஒப்பந்ததாரருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒப்பந்ததார்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட பணிகள் ஒரே செலவினத்தை கொண்டவை. ஆனால் ரூ19.13 லட்சம் கூடுதலான செலவு காண்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி மேம்பாட்டு திட்ட பணிகளைப் பெற்ற பின்னரே 3 ஒப்பந்ததார்கள் ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு முறைகேடாக ரூ19.57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குப்தர் காட் மேம்பாட்டு பணியில் கிளாம்ப் சரி செய்தல் உட்பட அடிப்படை பணிகூட செய்யாமல் பணம் பெறப்பட்டிருக்கிறது.
அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ8.22 கோடி வீணாக்கப்பட்டிருக்கிறது. பல செயல்பாடுகளுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சிஏஜி அறிக்கை விவரித்துள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications