Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டில் ஒன்று.. கிளம்பி "தெற்கு" நோக்கி வர்றாரு தலைவர்.. டக்குனு கவனிக்கும் பாஜக.. மோடிக்கு செக்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தலுக்கு தயாராகிவரும் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சி நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசப்போகிறார்.. இதை பாஜக உள்ளிட்ட கட்சிகள் உற்று கவனிக்க துவங்கி உள்ளன.

எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. எப்பவும் போல, வருகிற ஏப்ரல், மே மாதங்களில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதிக்கான அட்டவணையும் தயாராகி வருவதாக தெரிகிறது.

Can Congress Party defeat BJPs strategies and Karge State Congress executive Meeting today in Telangana

வடமாநிலம்: அதுமட்டுமல்ல, இப்போது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால், முன்கூட்டியே, அதாவது அடுத்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், வடமாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..

எனினும் எப்படி பார்த்தாலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்..

மும்முரம்: தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், தேசிய கட்சியான காங்கிரசும் மும்முரமாகி உள்ளது.. பாஜகவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி, வெற்றி பெறுவதற்கான காய்நகர்த்தலையும் காங்கிரஸ் துவங்கி உள்ளது.

பாஜகவை போலவே, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சியும் முன்கூட்டியே தொடங்கி விட்டது எனலாம்.. இப்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சி நிர்வாகிகளை காங்கிரஸ் தலைவர் கார்கே நேரடியாக சந்தித்து பேசப்போகிறார்..

இதன் முதல் கூட்டம், இன்று தெலங்கானாவில் நடக்கிறது... இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

நிர்வாகிகள்: இதைத் தொடர்ந்து ஜனவரி 28ம் தேதி உத்தரகாண்டிலும், 29ம் தேதி ஒடிசாவிலும், பிப்ரவரி 3ல் டெல்லியிலும், கேரளாவில் பிப்ரவரி 4ம் தேதியும், இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதியும், பஞ்சாப்பில் பிப்ரவரி 11ம் தேதியும், நம்முடைய தமிழ்நாட்டிலும் பிப்ரவரி 13ம் தேதியும், ஜார்க்கண்டில் பிப்ரவரி 15ம் தேதியும் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+