விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது:மத்திய அமைச்சர்கள் உறுதி.. -8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
டெல்லி: புதிய விவசாய சட்டங்களை ஒருபோதும் திரும்பப் பெறவே முடியாது என டெல்லியில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் இருவரும் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 15-ந் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு 44 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

70 பேர் பலி- பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை 7 முறை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

8-ம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இன்று பிற்பகல் டெல்லி விஞ்ஞான பவனில் 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது, மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை திரும்பப் பெறவே முடியாது; போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றனர் மத்திய அமைச்சர்கள்.

ஒட்டுமொத்த நாட்டுக்குமானது..
மேலும் ஒருசில மாநிலங்களுக்காக மட்டும் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை; ஒட்டுமொத்தமான நாட்டுக்கும்தான் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் கூறினர். ஆனால் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளோ இதனை நிராகரித்தனர். மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களைக் கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என திட்டவட்டமாக கூறினர்.

விவசாய சங்க தலைவர்கள் உறுதி
அத்துடன் வெற்றி பெறுவோம்; அல்லது உயிரை விடுவோம் என பேச்சுவார்த்தை மேஜையில் பதாகைகளையும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வைத்திருந்தனர். அரசு தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இன்றைய 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் 15-ந் தேதி 9- கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications