என்னது தேர்தல் வெற்றி செல்லாதா.. வழக்கு போட்டு நேரத்தை வீணடிக்கிறார்! கனிமொழி தரப்பில் பரபரத்த வாதம்
டெல்லி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
வேட்பாளரே இல்லாத ஒருவர் தொடர்ந்த வழக்கால் தனது பணிகள் பாதிக்கப்படுவதாக கனிமொழி தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் சந்தான குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எல்லாம் சட்டப்படியே வழக்குத் தொடரப்பட்டதாக பதில் வாதத்தை முன் வைத்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி
கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி அமோக வெற்றி பெற்றார். சுமார் 5.25 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி இவர் தொகுதிப்பணிகளில் வேகமும் சுறுசுறுப்பும் காட்டி வருகிறார். இந்நிலையில் கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது எனக் கோரியும் அவரது வெற்றியை எதிர்த்தும் சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உச்சநீதிமன்றம்
இந்த வழக்கிற்கு தடைகோரி கனிமொழி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே இவ்வழக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலேயே இருந்த நிலையில், இறுதி விசாரணைக்கு இன்று வந்தது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்திய நிலையில் வழக்கை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.

வழக்கறிஞர் வில்சன்
இதனிடையே கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருப்பவர் வாக்காளர் தான் என்றும் அவர் வேட்பாளர் கிடையாது எனவும் நீதிபதிகளிடம் எடுத்துக் கூறினார். மேலும், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு கனிமொழியின் கணவர் பான் கார்டு எண் சேர்க்கப்படவில்லை என்பது தான் என்றும் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் எனவும் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். வேட்பாளரே இல்லாத ஒருவர் தொடர்ந்த வழக்கால் கனிமொழியின் பணிகள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

அக்டோபர் மாதம்
இதற்கு பதில் வாதம் செய்த மனுதாரர் சந்தானகுமார் தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின் படியே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைப்பதகாக தெரிவித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications