ஹாத்ரஸ் இளம்பெண்... பலாத்காரம் செய்துதான் கொல்லப்பட்டார்...சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது.
அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தரபிரதேச போலீசார் கூறிய நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸில் 19 வயது இளம்பெண் 4 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உத்தரபிரதேச போலீசார் முதலில் விசாரித்து வந்தனர். அந்த பெண்ணின் உடலை அவர்கள் இரவோடு, இரவாக அவசரமாக தகனம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை போலீசார் காப்பாற்ற முயல்வதாகவும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.அந்த 4 பேர் கைது செய்யபட்டனர். அதன் பிறகு மாநில அரசு பரிந்துரையின் பேரில், மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
15 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் ஹத்ராஸ் சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிபிஐ இந்த வழக்கு தொடர்பான குற்றபத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தரபிரதேச போலீசார் கூறிய நிலையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என சிபிஜ அந்த குற்ற பத்திரிகையில் தெரிவித்து உள்ளது. குற்றவாளிகள் 4 பேரின் பெயர்களும் குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிரிவு 376 டி(கற்பழிப்பு) பிரிவு 302(கொலை செய்தல்) மற்றும் சட்ட பிரிவுகள் 354 மற்றும் 376 ஏ கீழ் வழக்கு பதிவு செய்து சிறப்பு அறிக்கை குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications