பரபரப்பு.. சிபிஐக்கு எதிராக சிபிஐ இயக்குனரே வழக்குப்பதிவு.. இந்திய வரலாற்றில் முதல்முறை!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐ அமைப்பிற்கு எதிராகவே வழக்கு தொடுத்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐ அமைப்பிற்கு எதிராகவே வழக்கு தொடுத்து இருக்கிறார்.
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இவர்தான் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார்.

இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை திடீர் திருப்பமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.
மத்திய அரசும், சிபிஐ அமைப்பை கட்டுப்படுத்தும் மத்திய விஜிலென்ஸ் கமிஷனும் சிபிஐயும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.
அதாவது சிபிஐ சிறப்பு இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐ அமைப்பிற்கு எதிராகவே வழக்கு தொடுத்து இருக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீதான விசாரணை நடக்க உள்ளது. இந்த வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications