மமதா vs சிபிஐ.. எதிர்க்கட்சிகள் இன்று அவசர ஆலோசனை.. நாடு முழுக்க போராட திட்டம்!
மமதா பானர்ஜியின் தர்ணாவை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தர்ணாவை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.
நேற்று சிபிஐ அதிகாரிகள், கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை கைது செய்ய வந்தனர். ஆனால் மமதாவின் உத்தரவின் பேரில் கடைசியில் கொல்கத்தா போலீஸ், சிபிஐ அதிகாரிகளை கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார்.

சேர்ந்தனர்
மமதா பானர்ஜிக்கு ஒன்று என்றவுடன் தற்போது எதிர்க்கட்சிகள் பல அவருக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறது. ஏற்கனவே மெகா லோக்சபா தேர்தல் கூட்டணி காரணமாக, எதிர்க்கட்சிகள் பல நண்பர்களாகி உள்ளனர். தற்போது இந்த மமதாவின் போராட்டம் எதிர்கட்சியினரை மேலும் இணைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

யார் எல்லாம் ஆதரவு
பல கட்சித் தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு வரிசையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்று சந்திப்பு
இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். டெல்லியில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார். மாலை 4 மணி அளவில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

முடிவு எடுக்க வாய்ப்பு
இந்தியா முழுக்க போராட்டத்தை கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த போராட்டம் தொடர்பாக மமதாவுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகள் எல்லாம் போராட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இது தொடர்பான முடிவு இன்று மாலை எடுக்கப்படும். இதனால் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications