டெல்லியை அதிர வைத்த சம்பவம்.. மர்ம பொருள் எப்படி வெடித்தது? வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
டெல்லி: டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே மர்ம பொருள் இன்று காலை 7.50 மணியளவில் வெடித்தது. டெல்லியை அதிரவைத்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் மர்ம பொருள் வெடித்த அடுத்த நொடியிலேயே அந்த சிசிடிவி கேமராவும் அதிர்வுகளில் உடைந்து நொறுங்கியது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சோதனைக்கு பிறகு இந்த மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளி என்று தெரியவந்தாலும் தொடர்ச்சியாக விடுக்கப்படும் இத்தகைய மிரட்டல்கள் விமான பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இன்று காலை 7.50 மணியளவில் பயங்கர சத்ததத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்தது.

டெல்லி ரோகினி அருகே உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் சிஆர்பிஎப் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மர்ம பொருள் வெடித்தது. பள்ளிக்கு மிக அருகே பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டது. இதனால், சுற்றுவட்டார பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். மர்ம பொருள் வெடித்ததும் வெள்ளை நிற புகை சூழ்ந்தது. பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு மிக அருகில் இது நடந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில கார்களும் சேதம் ஆகின.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்விடத்திற்கு உடனடியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், என்.எஸ்.ஜி படையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்தனர். வெடித்தது என்ன மாதிரியான பொருள்? வெடிகுண்டா? எனக் கண்டறிய அங்கிருந்து மாதிரிகளை எடுத்து சென்று தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த ஆய்வுகளின் முடிவுக்கு பிறகே பிரசாந்த் விஹார் பகுதியில் வெடித்தது வெடிகுண்டா அல்லது எந்த மாதிரியான பொருள் என்று தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர். எனினும், நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே, மர்ம பொருள் வெடிக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சியில், சிஆர்பிஎப் பள்ளி சுற்றுச்சுவர் அருகே திடீரென ஒரு பொருள் வெடித்து சிதறுகிறது.
சிஆர்பிஎப் பள்ளி சுற்றுச்சுவருக்கு எதிர்த்திசையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தான் இந்த வீடியோ பதிவாகியிருந்தது. மர்ம பொருள் வெடித்து சிதறியதும் அந்த கண்காணிப்பு கேமராவும் அதிர்வில் உடைந்து நொறுங்கியது. சிசிடிவி காட்சியில், மர்ம பொருள் வெடித்த அடுத்த நொடியே சிசிடிவி கேமராவும் உடைந்து விழுகின்றது போல் பதிவாகியுள்ளது.
பண்டிகை காலம் என்பதால், டெல்லியில் ஏற்கனவே போலீசார் ஹை அலார்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மர்ம பொருள் வெடித்து இருப்பதால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை மர்ம பொருள் வெடித்த பகுதியில், என்.எஸ்.ஜி கமேண்டோ படையினர் ரோபோட்டிங் இயந்திரத்தை அனுப்பி வேறு ஏதேனும் வெடி பொருட்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
தற்போது குறிப்பிட்ட அந்த இடத்தை என்.எஸ்.ஜி மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்துள்ளனர். வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள டெல்லி போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடக்கும் போது, அப்பகுதியில் இருந்தவர்களிடமும் செல்போன் சிக்னல்களை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications