தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17ஆம் தேதி நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் சமீபத்தில் அறிவித்தார். விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, சொட்டு மருந்து போடப்படும் என்று அவர் கூறினார்.
இப்பணி, 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, நாடு ஆவலுடன் எதிர்பார்த்த கொரோனா தடுப்பூசி போடும் பணி, வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரொம்ப தப்புங்க... கொரோனா வல்லுநர்களை அனுமதிக்க மறுக்கும் சீனா... அதிருப்தியில் உலக சுகாதார அமைப்பு
இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.