ரூ.3887 கோடி மதிப்பீட்டில் 15 இலகுரக ஹெலிகாப்டர்கள்! எச்ஏஎல் நிறுவனத்திடம் இந்தியா வாங்குகிறது!
டெல்லி: பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து ரூ.3887 கோடி மதிப்பீட்டில் 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா தொடர்ந்து ராணுவத்தை வலுப்படுத்தி வருகிறது. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் செயல்பாடுகளால் இந்தியாவின் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகி வருகிறது.
இந்தியாவின் பெரும்பாலான ராணுவ தளவாடங்களை இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து பெற்று வருகிறது. இதில் போர் விமானங்களும் அடங்கும்.

பிரதமர் மோடி ஆலோசனை
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது உள்நாட்டு உற்பத்தி மூலம் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராணுவ தளவாடங்கள் குறித்த விஷயங்களும் ஆராயப்பட்டது.

15 இலகுரக ஹெலிகாப்டர்கள்
இதையடுத்து ரூ.3,887 கோடி மதிப்பீட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனும் எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,887 கோடி மதிப்பீட்டில் 15 புதிய இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் உள்ள ஆத்மநிர்பார் பாரத் திட்டத்துக்கு வலு சேர்க்கும் என மத்திய அரசு நம்புகிறது.

எதற்காக இந்த முடிவு
இந்த 15 ஹெலிகாப்டர்களில் 10 இந்திய விமானப்படைக்கும், 5 ராணுவத்துக்கும் வழங்கப்பட உள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு போர் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணி என்ன
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛இலகுரக போர் ஹெலிகாப்டர்கர் பாதுகாப்பு பிரிவில் நல்ல திறனுடன் செயல்படுகிறது. உரிய வேகம், அதிக செயல்திறனுடன் தேடுதல் பணி, மீட்பு பணி, போர் ஆகியவற்றுக்கு பயன்படுத்த முடியும். பதுங்கு குழிகளையும் தகர்க்க பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications