வணிகர்கள் கடும் எதிர்ப்பு.. ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்க மத்திய அரசு தடை
டெல்லி: சிறிய வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நாட்டின் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை தாற்காலிகமாக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்து. அதேநேரம் அத்தியாவசிமான பொருட்களை டெலிவரி செய்ய ஈ காமர்ஸ் நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை.
Recommended Video
கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் மார்ச் 24 அன்று 21 நாட்களுக்கு லாக்டவுன் அறிவித்தார். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்து தொழில்களும் முடங்கின. பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த லாக்டவுனை மே 3 வரை நீட்டித்தும், அதே வேளையில், நாட்டின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் சில தொழிற்சாலைகள், சிலசிறுகுறு தொழில்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

ஈ-காமர்ஸ்க்கு அனுமதி
இது தொடர்பாக விரிவான அறிவிப்பு ஏப்ரல் 15 ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக இல்லாத பகுதிகளில் ஈ-காமர்ஸ் தளங்கள் முழுமையாக செயல்படலாம் என்றும் அனைத்து பொருட்களையும் விற்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பொருட்களை எடுத்து டெலிவரி செய்வதற்கு வாகனங்களுக்கு பாஸ் வழங்கலாம் என்று அறிவித்தார். இதனால் முழு அளவிலான நடவடிக்கைகளுக்கு ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தயாராகி வந்தன.

ஏமாற்றம் அளிக்கிறது
இதற்கு சிறிய வியாபரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) உள்ளிட்ட பல்வேறு வர்த்தகர்களின் குழுக்கள் ஆன்லைன் நிறுவனங்கள் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. உள்ளூர் வர்த்தகர்களை அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க அனுமதிக்காத நிலையில். , ஈ-காமர்ஸ் தளங்களை அனுமதிப்பது வர்த்தக ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும் அரசின் முடிவு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் வர்த்தக கூட்டமைப்பு வேதனை தெரிவித்து. இதுதொடர்பாக ஏப்ரல் 18 அன்று அரசுக்கு கடிதம் அந்த கூட்டமைப்பு எழுதியது.

வர்த்தக கூட்டமைப்பு
அத்துடன் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஒரு ட்வீட்டில் இந்தியாவின் 7 கோடி வர்த்தகர்களின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு, அத்தியாவசியமற்ற பொருட்களை இ காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்ககூடாது எனறு கூறி பிரதமர் மோடி, அமித்ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்டோரை டேக் செய்திருந்தார்,

அத்தியாவசியமற்ற பொருட்கள்
இதையடுத்து உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இன்று வெளியிட்ட டுவிட் பதிவில், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். அதேநேரம் அத்தியாவசிமான பொருட்களை டெலிவரி செய்ய இகார்மஸ் நிறுவனங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி உள்ளன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications