பெங்களூர், மகாராஷ்டிரா மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி! சென்னை மெட்ரோவுக்கு பணம் தரவில்லை
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்படுவதால், இதற்கு நிதி தர முடியாது என்று கூறி கைகழுவிய மத்திய அரசு, தற்போது பெங்களூர் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, சென்னை, ஐதராபாத் போன்ற நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம்: போக்குவரத்து நெரிசல் இன்றி நகரங்களில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடியும் என்பதால் நகர்புற மக்களிடையே மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், மெட்ரோ ரயில் சேவைகள் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் 2- ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்த தமிழக அரசு முன்மொழிந்தது.
நிதி ஒதுக்க மறுப்பு: 118.9 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மெட்ரோ ரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது தயாநிதி மாறன் எம்பி இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் டோகன் சாஹு, இந்தத் திட்டத்திற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாநிலத் துறை திட்டம்: இது தொடர்பாக அவர் கூறுகையில், அதிக செலவில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்தது. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கிமீ வழித்தடத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது. சென்னை மெட்ரோ கட்டம் -2 திட்டத்துக்கு 63,246 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, சென்னை மெட்ரோ கட்டம் -2 திட்டம் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதைச் செயல்படுத்துவதற்கான செலவினம் தற்போது மாநில அரசால் ஏற்கப்படுகிறது, என்றார்.
மகாராஷ்டிரா, பெங்களூருக்கு ஒப்புதல்: முதல் கட்ட திட்டத்திற்கு மட்டுமே நாங்கள் நிதி கொடுத்தோம். இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்று அறிவித்து இருந்தார். தமிழக அரசின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என கைவிரித்த மத்திய அரசு தற்போது, பெங்களூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, புனே ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த ஒப்புதல் கவனம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் இந்த இரு பெரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து இருப்பது அங்குள்ள ரியல் எஸ்டேட் துறை வளரவும், இரு நகரங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெங்களுர் மெட்ரோ வழித்தடம்: பெங்களூரில் 3-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் 15,611 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஜேபி நகர் டூ கெம்பபுரா மற்றும் ஹோசஹல்லி டூ கடபாகெரே வரையும் என இரண்டு வழித்தடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே ஒருங்கிணைந்த மெட்ரோ திட்டம் என்பது 12,200 கோடி ரூபாய் மதிப்பிட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. புனே மெட்ரோ என்பது ஸ்வரக்கேட் டூ கத்ராஜ் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2,945 கோடி ரூபாய் ஆகும்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications