சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் இனி கிடையாது.. மத்திய அரசு
டெல்லி: அத்தியாவசிய கனிமங்களுக்கான சுரங்கத் திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டங்கள் இனி நடத்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய கனிமங்களுக்கான சுரங்கத் திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டங்கள் இனி நடத்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் போது, அப்பகுதியினரின் கருத்து கேட்பு நடைபெறும். மத்திய அரசின் புதிய விதிகளின்படி அணுசக்தி, பாதுகாப்புக்குத் தேவையான கனிமங்கள் குறித்த திட்டங்களுக்கு கருத்து கேட்பு இருக்காது.
யுரேனியம், தோரியம், லித்தியம், கோபால்ட் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் பாதுகாப்புக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, கனிமங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய விதியால், கருத்து கேட்பு கூட்டம் நடைபெறாமலே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படும்.
அதாவது, புதிய விதிகளின்படி அணுசக்தி, பாதுகாப்புக்குத் தேவையான கனிமங்கள் குறித்த திட்டங்களுக்கு கருத்து கேட்பு இருக்காது என்பதே இதன் சாரம்சமாகும். மத்திய அரசின் இந்த புதிய விதிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் புதிய விதி தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறுகையில், "மத்திய அரசின் இந்த புதிய விதி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை திருத்தம் செய்யும் போதே இந்த விதியை வைத்து இருந்தார்கள். அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தி வைத்தனர். ஆனால் தற்போது அறிவித்திருப்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அரிய வகை கனிமங்கள் தமிழக கடற்கரையில் கிடைக்கின்றன. எனவே, தமிழக அரசு இந்த விதிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கோரிக்கையை வைக்கிறோம். மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மக்களிடம் கருத்து கேட்டால் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன என்று சொல்வார்கள்.
அதெல்லாம் தேவையில்லை. 'நாங்கள் நினைப்பதுதான் சட்டம், நாங்கள் நினைப்பதுதான் விதிகள்' என்று சொல்லும் மனப்பான்மையைத்தான் இது காட்டுகிறது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தேச பாதுகாப்பு என்பது மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதை அரசு தனியாக செய்ய முடியாது. மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த திட்டத்தை கொண்டு வர முயன்றாலும், அது தேசத்திற்கு எதிராகவே போய் முடியும். இறையாண்மை மக்களிடம் தான் உள்ளது" என்றார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications