தேச துரோக சட்டப்பிரிவை நீக்க கோரும் வழக்கு- பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்
டெல்லி: நாடு விடுதலைக்குப் பின்னரும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேச துரோக சட்டப் பிரிவுகள் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறையில் உள்ளது இந்திய குற்றவியல் சட்டம் 124ஏ. இது நாட்டுக்கு தேசதுரோகம் இழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தேசதுரோக சட்டப் பிரிவு 124ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது; இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எதிர்ப்பு குரல்கள்
நாட்டில் 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகள் எண்ணிக்கை 160% அதிகரிப்பாகும். ஆனால் இந்த வழக்குகளின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 3.3%தான். ஆகையால் தேசதுரோக சட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்கிற எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த தேசதுரோக சட்டம் நாடு விடுதலைக்குப் பின்னரும் பின்பற்றப்பட்டு வருகிறது. இச்சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது; மக்களின் கருத்து உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது; ஆகையால் தேசதுரோக சட்டப்பிரிவு 124ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி கேள்வி
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்தது. அப்போது 124 ஏ பிரிவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் முன்வைத்திருந்தது. அப்போது, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கூட இந்த சட்டப் பிரிவு அவசியம்தானா? மத்திய அரசு இந்த பிரிவை இன்னமும் ரத்து செய்யாமல் இருப்பது ஏன்? ஐடி சட்டத்தின் 66ஏ பிரிவு நீக்கப்பட்டது. அதைப் போலவே தேசதுரோக சட்டப் பிரிவும் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசதுரோக சட்டப் பிரிவின் கீழான புகார்கள் பெரும்பாலானவை நிரூபிக்கப்படுவதும் இல்லை என கடுமையாக தெரிவித்திருந்தனர். ஆனால் மத்திய அரசு தரப்போ தேசதுரோக சட்டப் பிர்வு தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டது.

இன்றும் விசாரணை
இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இந்த வழக்கை இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று இந்த வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications