Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேச துரோக சட்டப்பிரிவை நீக்க கோரும் வழக்கு- பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு விடுதலைக்குப் பின்னரும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேச துரோக சட்டப் பிரிவுகள் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறையில் உள்ளது இந்திய குற்றவியல் சட்டம் 124ஏ. இது நாட்டுக்கு தேசதுரோகம் இழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தேசதுரோக சட்டப் பிரிவு 124ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது; இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எதிர்ப்பு குரல்கள்

எதிர்ப்பு குரல்கள்


நாட்டில் 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகள் எண்ணிக்கை 160% அதிகரிப்பாகும். ஆனால் இந்த வழக்குகளின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 3.3%தான். ஆகையால் தேசதுரோக சட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்கிற எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த தேசதுரோக சட்டம் நாடு விடுதலைக்குப் பின்னரும் பின்பற்றப்பட்டு வருகிறது. இச்சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது; மக்களின் கருத்து உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது; ஆகையால் தேசதுரோக சட்டப்பிரிவு 124ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி கேள்வி

தலைமை நீதிபதி கேள்வி

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்தது. அப்போது 124 ஏ பிரிவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் முன்வைத்திருந்தது. அப்போது, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கூட இந்த சட்டப் பிரிவு அவசியம்தானா? மத்திய அரசு இந்த பிரிவை இன்னமும் ரத்து செய்யாமல் இருப்பது ஏன்? ஐடி சட்டத்தின் 66ஏ பிரிவு நீக்கப்பட்டது. அதைப் போலவே தேசதுரோக சட்டப் பிரிவும் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசதுரோக சட்டப் பிரிவின் கீழான புகார்கள் பெரும்பாலானவை நிரூபிக்கப்படுவதும் இல்லை என கடுமையாக தெரிவித்திருந்தனர். ஆனால் மத்திய அரசு தரப்போ தேசதுரோக சட்டப் பிர்வு தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டது.

இன்றும் விசாரணை

இன்றும் விசாரணை

இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இந்த வழக்கை இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று இந்த வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+