அடுத்தது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இணைப்பதுதான்... மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதுதான் மத்திய அரசின் அடுத்த இலக்கு என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்போம் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாகிஸ்தான் மற்றும் சீனா வசமிருக்கும் காஷ்மீர் பகுதிகளையும் இந்தியாவுடன் இணைப்போம்; இதற்காக உயிரையும் கொடுப்போம் என்றார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரான பிலாவல் பூட்டோ, இம்ரான்கானின் பலவீனமான கொள்கைகளால் இப்போது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் ஶ்ரீநகர் பற்றி பேசிவந்த பாகிஸ்தான் இனி பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் தலைநகரான முசாஃபர்பாத் பற்றி சிந்திக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது என்றார்.
இந்நிலையில் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்- பால்டிஸ்தான் பகுதிகளில் மனித பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் முன்வைக்கப்பட்டன.
#WATCH Union Min Jitendra Singh:Next agenda is retrieving parts (PoK) of Jammu&Kashmir & making it a part of India. It's not only my or my party’s commitment,but it's a part of unanimously passed resolution of Parliament in 1994 by Congress govt headed by PM Narasimha Rao (10.09) pic.twitter.com/jcpfNYyafN
— ANI (@ANI) September 10, 2019
இதனிடையே டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இணைப்பதுதான். இது பாஜக அரசின் கொள்கை மட்டும் அல்ல. 1994-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு தீர்மானித்த விவகாரம்தான் இது என்று கூறினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications