இமயமலையில் 8.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு.. 15 மீட்டர் சரியலாம்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Recommended Video
டெல்லி: இமயமலைப் பகுதியில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வளர்ந்து வரும் நாகரீக உலகத்தில் இமயமலைப் பகுதியில், நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்று இந்திய ஆய்வாளர்கள் எச்சரிக்கை தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் புவியியல் வல்லுனராக இருக்கும் சிபி ராஜேந்திரன் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில், இதுபற்றி கூறியிருப்பதாவது: எதிர்காலத்தில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கம் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புவியியல் இதழ் ஆராய்ச்சியின் கூற்றுப்படி, ஏற்கனவே நேபாளம் மற்றும் சர்காலியா ஆகிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று யூகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடங்கியது ஜி20 மாநாடு.. குலுங்கியது பியூனஸ் அயர்ஸ்.. நிலநடுக்கத்தால் அதிர்ச்சி!
1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட 600 கிமீ தூரம் வரையில் நிலநடுக்க தாக்கம் இருக்க கூடும். இது பாத்பூர் மற்றும் மோகனகோலா ஆகியவற்றுக்கு நடுவேயான பகுதி இருக்கும்.
இந்திய எல்லைப் பகுதியில் இமயமலை 15 மீட்டர் தூரம் வரை சரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.