குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் சீனா - செப்டம்பர் ஒப்பந்தம் மீறல்
டெல்லி: கிழக்கு லடாக்கில் பதட்டங்களைத் தணிக்கும் விதமாக அளித்த வாக்குறுதிகளை தற்போது சீன ராணுவம் மீறியுள்ளது.
சீன ராணுவம் உறுதிமொழியை மீறி, கிழக்கு லடாக்கில் தனது நிலைகளை பலப்படுத்தியது மட்டுமல்லாமல், சப்தமே இல்லாமல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் குவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாமல், திருட்டுத்தனமாக அதை சீனா மீற முயன்றிருக்கிறது என்பதையும் அதன் சமீபத்திய செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அதில், இரு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை ஆர்வத்துடன் செயல்படுத்தவும், எல்லையில் தரைவழித் தகவல்தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்களையும் தவறான கருத்துக்களையும் தவிர்க்கவும், எல்லைக்கு அதிக வீரர்களை அனுப்புவதை நிறுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தான், கிழக்கு லடாக்கில் தனது ராணுவ துருப்புகளை சீன ராணுவம் அதிக அளவில் குவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-சீனா எல்லையில் மற்ற இடங்களில், சிக்கிமின் Naku La எல்லையைத் தாண்டி நிரந்தர பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தான் PLA குழுக்கள் (சீனாவின் People's Liberation Army) உயர் மட்ட அளவிலான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
ஒருபுறம் சீனா எல்லையில் ராணுவத்தினரை குவிக்க, மறுபுறம் இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றன. சுசுல் முகாம் அருகே மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications