என்னய்யா சொன்னதையே சொல்லுறீங்க! பிரதமர் மோடியை தாக்கிய ராகுல்! சீனா பாலம் கட்டுவதால் ஆக்ரோஷம்
டெல்லி: இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாங்காங் ஏரியில் சீனா 2வது பாலம் கட்டும் நிலையில் ‛‛நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்'' என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு ராகுல் வெகுண்டெழுந்துள்ளார். சொன்னதையே சொல்லாமல் நாட்டை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியா-சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுகிறது. சதி வேலைகளை கைவிட மறுத்து சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.
Recommended Video

கிழக்கு பிராந்தியத்தில்...
இந்நிலையில் தான் இந்தியாவின் அருணாச்சல்பிரதேசம் எல்லை பகுதிகளில் சீனா வாலாட்டி வருகிறது. குறிப்பாக அருணாச்சல் பிரதேசம் பகுதியில் சீனா தனது எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இதுபற்றி இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தளபதியும், லெப்டினன்ட் ஜெனரலுமான ஆர்பி கலிதா கூறியிருந்தார்.

போக்குவரத்து மேம்பாடு
அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே சீனா கட்டுமான பணிகளை மேம்படுத்தி வருகிறது. போர்ச்சூழலை சந்திக்கும் வகையில் படைகளை அனுப்பி வைக்க ஏதுவாக சாலை, ரயில் வான்வழி போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்துகிறது. மேலும் எல்லை கட்டுப்பாட்டு கோடுகளையொட்டி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை இந்தியா கண்காணித்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

பாங்காங் ஏரியில் 2வது பாலம்
இதற்கிடையே சீனா ஆக்கிரமித்துள்ள பாங்காங் டிசோ ஏரியில் அந்நாடு கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பாலத்தை கட்டியது. இதன்மூலம் போர் தளவாடங்கள், வீரர்களை சீனா எளிதில் எல்லைப்பகுதிக்கு கொண்டு வர முடியும். இந்த நிலையில் லடாக் கிழக்கு பகுதியில் உள்ள பாங்காங் ஏரியில் சீன ராணுவம் இரண்டாவது பாலத்தை கட்டி வருவது தெரியவந்துள்ளது. இது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

தீவிர கண்காணிப்பு
இந்தியா சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான பாங்காங் டிசோ ஏரியில் சீனா 2வது பாலம் அமைப்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்'' என தெரிவித்துள்ளது.

வெகுண்டெழுந்த ராகுல்
இந்நிலையில் சீனா 2வது பாலம் கட்டும் விஷயத்தை காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛பாங்காங் ஏரியில் சீனா முதல் பாலம் கட்டியபோது அதுபற்றி தீவிரமாக கண்காணிப்பதாக இந்தியா கூறியது. தற்போது 2வது பாலம் கட்டும்போதும் நிலைமையை கண்காணிப்பதாக இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. இந்த விஷயத்தில் பயமுறுத்தும் செயல், சாதுவான பதில் ஆகியவை சரிப்பட்டு வராது. பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications