டோக்லாமில் இனி சீனா வாலாட்ட முடியாது... 'புதிய பாதை' யால் மிரட்டிய இந்தியா!
டெல்லி: சர்ச்சைக்குரிய பூட்டானின் டோக்லாம் பகுதியை இந்திய ராணுவம் எந்த தடையும் இல்லாமல் சென்றடைய புதிய பாதை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூட்டானின் டோக்லாம் பகுதியான இந்தியா-சீனா எல்லையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இப்பகுதியை இந்திய ராணுவம் பாதுகாத்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் டோக்லாமை கைப்பற்ற சீனா பகீரத முயற்சிகளை மேற்கொண்டது.

இதனால் எல்லையில் இந்தியா- சீனா இடையே 72 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் சீனா தமது ராணுவத்தை திரும்பப் பெற்றது. அண்மையில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னர் நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் ராணுவத்தை மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது.
சீனாவை ஒட்டிய எல்லைகளில் நமது ராணுவத்தினர் எந்த தடையும் இல்லாமல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாகவே தற்போது சர்ச்சைக்குரிய டோக்லாம் பிராந்தியத்துக்கு புதிய பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா-சீனா எல்லையில் மொத்தம் 61 கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் 3,346 கி.மீ தொலைவுக்கு விரிந்துள்ளது. தற்போது வரை 3298 கி.மீ தொலைவு பாதைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் எஞ்சியிருக்கும் 11 கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதைகள் 58 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications