"எல்லை பிரச்சினையை தீர்க்க இது தான் ஒரே வழி.." சீன அதிகாரிகளிடம் அஜித் தோவல் ஓபன் டாக்.. பின்னணி
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோசமான சூழலே நிலவி வந்தது.
அதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர், நிலைமை மேலும் மோசமானது. இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வரும் சூழலில் இது மிகவும் பதற்றமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்த உடன் வாங் யீ நேற்று நேரடியாக டெல்லி வந்தடைந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர், சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும். இந்த பயணம் கடைசி வரை உறதி செய்யப்படாமலே இருந்தது. இந்தச் சூழலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று சந்தித்துப் பேசினார்.

அஜித் தோவல் உடன் சந்திப்பு
இந்தச் சந்திப்பின் போது, எல்லையில் பிரச்சினை ஏற்படும் இடங்களில் எல்லாம் வீரர்கள் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு மந்திரி வாங் யீயிடம் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை இயல்பாக நடைபெற வேண்டும் என்றும் எல்லையில் ஏற்படும் சிக்கலைப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் தோவல் குறிப்பிட்டார். மேலும், இரு நாட்டு நடவடிக்கைகள் பரஸ்பர பாதுகாப்பு உணர்வை மீறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை முக்கியம்
தற்போது நிலவும் சூழலில் பரஸ்பர நலன் இல்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை மீட்டெடுப்பது பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க முறையான பேச்சுவார்த்தை முக்கியம் என்றும் அஜித் தோவல் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளும் அமைதியை மீட்டெடுக்க ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டங்களில் அமைதி பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோசமான உறவு தொடரும் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சந்திப்பு
இந்தச் சந்திப்பில் இரு தரப்பும் ஒத்த கருத்துடன் செயல்படுவது குறித்தும், நிலுவையில் உள்ள சிக்கல்களை விரைவில் தீர்ப்பது குறித்தும் இரு தரப்பும் விவாதித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் உறவுகளைக் கையாள்வதில் முதிர்ச்சி மற்றும் நேர்மை அவசியம் என்பதும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பிற்குப் பின், சீன அமைச்சர் வாங் யீ வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சீனாவுக்கு வர அழைப்பு
அஜித் தோவல் உடனான சந்திப்பின் போது, சீனாவுக்கு வருமாறு சீனப் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்தனர். இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினை தீர்ந்த பின்னர், கண்டிப்பாகச் சீனாவுக்கு வருவதாக அஜித் தோவல் பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ரீதியாக மொத்தம் 15 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications