உண்மை தெரிஞ்சாகணும்.. வீரர்களை எந்த இடத்தில் கொன்றார்கள்.. 2 கேள்வியுடன் ராகுல் காந்தி அதிரடி டிவீட்
வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்று பிரதமருக்கு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்
டெல்லி: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று விடாமல் விரட்டுகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி.. எல்லையில் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து ராகுல் காந்தி 2 கேள்விகள் கேட்டுள்ளார்.
அடித்தே கொல்லப்பட்ட நம் வீரர்களை நினைத்து நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. சீன பொருட்களை வாங்கவே கூடாது என்று ஆவேசக் குரல்களும் ஒலித்து வருகின்றன. தற்போது இரு நாட்டு உறவிலும் விரிசல் விழுந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யலாம் என்று சீனா கூறியுள்ளது.

இதனிடையே மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறது.. ப.சிதம்பரம் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. எல்லை விவகாரம் குறித்து, இந்த 10 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
அதேபோல, ராகுல்காந்தியும் சம்பவம் நடந்த அன்றே இதை பற்றி கேள்வி எழுப்பினார்.. "எந்த தைரியத்தில் சீனா இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது? பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? ஏன் ஒளிந்து கொண்டு இருக்கிறார்? என்ன நடந்தது என்று நமக்கு தெரிய வேண்டும். எந்த தைரியத்தில் சீனா நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது? கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ஏன் நிராயுதபாணியாக, உயிர்த்தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்கள்? எப்படி அவர்கள் நமது நிலத்தை அபகரிக்கலாம்?" என அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமர் மோடி முன் வைத்திருந்தார்.
இந்த சமயத்தில்தான், அதாவது நேற்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.. இதில் பிரதமர் பேசும்போது, "இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழையவில்லை.. இந்திய நிலைகள் எதையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை" என்று தெரிவித்தார்.
PM has surrendered Indian territory to Chinese aggression.
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2020
If the land was Chinese:
1. Why were our soldiers killed?
2. Where were they killed? pic.twitter.com/vZFVqtu3fD
இதுகுறித்து ராகுல்காந்தி திரும்பவும் ஒரு ட்வீட் போட்டு, 2 கேள்விகளை கேட்டுள்ளார்.. அதில், "சீனாவின் ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து அவர்களிடம் சரணடைந்துள்ளார் பிரதமர்.
அந்த இடம் சீனாவுடையது என்றால்,
1. ஏன் நமது வீரர்கள் கொல்லப்பட்டனர்?
2. நமது வீரர்கள் எந்த இடத்தில் கொல்லப்பட்டனர்? என்று கேட்டுள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் கேள்விக்கு மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications