சிவப்பு பட்டனை அழுத்திய வெங்கையா நாயுடு.. திடீரென நிறுத்தப்பட்ட ராஜ்ய சபா ஒளிபரப்பு.. என்ன ஆனது?
மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது திடீர் என்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
Recommended Video
டெல்லி: மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது திடீர் என்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று முதல் நாள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இன்று ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

என்ன அமளி
இந்த நிலையில் ராஜ்யசபாவில் அமித் ஷா பேசிக்கொண்டு இருக்கும் போதே காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் எழுந்து நின்று அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷா பேசுவது தவறு, அவர் நிறைய உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசுகிறார். இதை அனுமதிக்க கூடாது என்று கூச்சல் போட்டனர்.

கூடாது
இதை சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்தார். அமித் ஷா பேசும் போது குறுக்கிட கூடாது. உங்களுக்கு பேச நேரம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசுங்கள். அதுவரை சத்தம் போடாதீர்கள் என்று கூறினார்.

கேட்கவில்லை
ஆனால் இதை கேட்காத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சல் இட்டு வந்தனர். இதனால் கோபம் அடைந்த வெங்கையா நாயுடு நீங்கள் அமைதியாக இருக்கவில்லை என்றால், நீங்கள் பேசுவது எதையும் பதிவு செய்ய மாட்டேன். நீங்கள் பேசுவது ஒளிபரப்பும் ஆகாது என்று குறிப்பிட்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூச்சல் இட்டனர்.

நாயுடு
இதனால் உடனே வெங்கையா நாயுடு தனது இருக்கைக்கு கீழ் இருக்கும் சிவப்பு நிற பட்டனை அழுத்தினார். இது ராஜ்யசபா டிவி ஒளிபரப்பு அறைக்கு சிக்னல் எழுப்பும். இதன் மூலம் உடனடியாக அவை நடவடிக்கையின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

லைவ் இல்லை
லைவ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் அமித் ஷா பேச்சு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. சரியாக 5 நிமிடம் கழித்து மீண்டும் அவை தொடங்கி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்பின் அவையில் பெரிய அளவில் கூச்சல் குழப்பம் எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications