மீண்டும் போராட்டத்தை தொடங்கிய டெல்லி மாணவர்கள்.. மாஸ் பிளான்.. சென்னை ஐஐடியும் சப்போர்ட்!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாணவர்கள் அமைப்பு இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தற்போது காட்டு தீ போல போராட்டம் பரவி வருகிறது. அசாமில் மூன்று நாட்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இது. 11 மணி நேர அடையாள எதிர்ப்பு பேரணியோடு முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவி வருகிறது.
இந்த சட்டம் செயல்பட தொடங்கினால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம். தற்போது டெல்லி முதல் சென்னை வரை இந்தியா முழுக்க இந்த போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம்
இந்த சட்டத்திற்கு எதிராக நேற்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் நடந்த போராட்டத்தில் பெரிய கலவரமே ஏற்பட்டது. இதில் மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள். இதில் மூன்று பேருந்துகள் கொளுத்தப்பட்டது.

மாணவர்கள் காயம்
அதேபோல் 20க்கும் அதிகமானவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். பலர் கை உடைந்து, கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் நேற்று 100க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் விடுதலை
இவர்கள் எல்லோரும் இன்று காலைதான் விடுதலை செய்யப்பட்டார்கள். நேற்று இரவு ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டது போலவே உத்தர பிரதேச அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

மீண்டும் போராட்டம்
இந்த தாக்குதலை கண்டித்து தற்போது டெல்லியில் மீண்டும் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாணவர்கள் அமைப்பு இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் போராடி வருகிறார்கள்.

எங்கு நடக்கிறது
டெல்லியில் இவர்கள் இப்போது ஜந்தர் மாந்தர் மைதானத்தை நோக்கி பேரணி நடத்தி வருகிறார்கள். இவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு சென்னை ஐஐடி மாணவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications