"நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.." உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கருத்து
டெல்லி: இந்தியாவில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கிடையே பட்டாசுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சில முக்கிய கருத்துகளைக் கூறினார். பட்டாசு தடை என்பது ஏன் டெல்லியில் மட்டும் இருக்க வேண்டும் எனக் கேட்ட அவர், பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றால் நாடு முழுக்க தடை விதிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இந்தியாவில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தீபாவளி என்றாலே குஷியாகிவிடுவார்கள். மேலும், தீபாவளியில் அதிகாலை முதல் இரவு வரை பட்டாசு சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாகக் காற்று மாசு காரணமாகப் பட்டாசுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் பட்டாசுகளுக்கு முழுமையாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாடு முழுக்க பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.. டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்கு மட்டும் பட்டாசு தடை ஏன் என கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், பட்டாசு தடை விதிக்க வேண்டும் என்றால் அதை நாடு முழுக்க விதிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்தனர்.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசு புகையால் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லி- என்சிஆர் மக்களை மட்டும் சிறப்புக் குடிமக்களாகக் கருதி அவர்களுக்காக மட்டும் தனியாக ஒரு கொள்கையை உருவாக்க முடியாது என்று தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "டெல்லி என்சிஆர் பகுதி மக்களுக்குத் தூய்மையான காற்று கிடைக்க உரிமை இருக்கும்போது பிற நகர மக்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை? பட்டாசு தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு பட்டாசு கொள்கையும் நாடு முழுக்க அமல்படுத்தப்படும் வகையில் இருக்க வேண்டும்.
கடந்த முறை குளிர்காலத்தில் நான் அமிர்தசரஸில் இருந்தேன்.. அங்கு மாசு டெல்லியை விட மோசமாக இருந்தது. பட்டாசுகளைத் தடை செய்ய வேண்டும் என்றால், நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்" என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து நாடு தழுவிய பட்டாசு தடை கோரிய இந்த மனு குறித்து காற்று தர மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications