பஞ்சாப்பில்தான் வட இந்தியாவிலேயே நிலக்கரி பற்றாக்குறையால் மிக மோசமான மின்சார விநியோகப் பாதிப்பு!
டெல்லி: வட இந்திய மாநிலங்களிலேயே நிலக்கரி பற்றாக்குறையால் மிக மோசமான மின்சார விநியோக பாதிப்பை எதிர்கொண்டு அதிக மணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தியது பஞ்சாப் மாநிலம்தான்.
Recommended Video
நாடு முழுவதும் கடும் நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மின்வெட்டு அபாயம் உருவாகி உள்ளது. இடைவிடாத கனமழை, சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்வு ஆகியவை நிலக்கரி பற்றாக்குறைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் நாடு முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உருவாக்கும் அனல்மின் நிலையங்களில் பெரும்பாலானாவை இயங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை விரைவில் சரியாகிவிடும் என்கிறது மத்திய அரசு.

மாநிலங்களில் மின்வெட்டு
இதனிடையே பல மாநிலங்கள் அனல்மின் நிலையங்களை மூடியும் உள்ளன. இதனால் மின்வெட்டை மாநிலங்கள் அமல்படுத்தியும் வருகின்றன. வட இந்தியாவில் மிக மோசமான மின்சாரப் பற்றாக்குறை, மின்வெட்டை எதிர்கொண்டிருக்கிறது பஞ்சாப் மாநிலம்தான்.

வட இந்தியா நிலவரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்த மின்சார தேவை 19,843 மெகாவாட். திங்கள்கிழமையன்று விநியோகிக்கப்பட்ட மின்சாரம் 18,973. சுமார் 870 மெகாவாட் மின்சார பற்றாக்குறையை உ.பி. எதிர்கொண்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்த மின்சார தேவை 12,534 மெகாவாட். ராஜஸ்தான் விநியோகித்த மின்சாரம் 12,262. ஆக 272 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பற்றாக்குறை என்பதால் ராஜஸ்தான் மாநிலம் சமாளித்தது.

சமாளிக்கும் வட இந்திய மாநிலங்கள்
ஹரியானாவை எடுத்துக் கொண்டால் அதன் மொத்த மின்தேவை 8,382 மெகாவாட். திங்கள்கிழமையன்று ஹரியானா மாநிலம் நுகர்வோர்களுக்கு சப்ளை செய்தது 8,319 மெகாவாட். ஹரியானாவின் மின்பற்றாக்குறை 83 மெகாவாட் என்பதால் அம்மாநிலமும் சமாளித்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி மாநிலங்களும் கணிசமான மின்சாரத்தை வடக்கு மின் தொகுப்பின் மூலம் பெற்று விநியோகம் செய்ததால் மின்தேவையை ஒருவழியாக சமாளித்து மின்வெட்டு உள்ளிட்ட அபாயங்களில் இருந்து தப்பியது.

பஞ்சாப்பில் பாதிப்பு அதிகம்
ஆனால் பஞ்சாப் மாநில மின்சார பற்றாக்குறை 2,295 ஆக இருந்தது. பஞ்சாப்பில் நுகர்வோர்களுக்கான மின்சார தேவை 11,046 மெகாவாட். ஆனால் மின்சார விநியோகிக்கப்பட்டது என்னவோ 8,751 மெகாவாட் மட்டுமே. இதனால் கடுமையான மின்வெட்டை பஞ்சாப் மாநிலம் அம்மல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மின்சாரப் பற்றாக்குறையால் 4 மணி நேரம் முதல் சுமார் 7 மணிநேரம் வரை மின்வெட்டை பஞ்சாப் அரசு அமல்படுத்தியது. அதாவது வட இந்திய மாநிலங்களில் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருப்பது பஞ்சாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications