Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்விகி, இன்ஸ்டாமார்ட்டுக்கு எதிராக முறையீடு.. ஆன்லைன் விற்பனையை ஒழுங்குப்படுத்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்வது இந்தியாவில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இதனால் சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி, ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிளிங் இட், செஃப்டோ, ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதுதொடர்பாக 'வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கம்' மற்றும் 'அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு' தாக்கல் செய்துள்ள மனுவில்,

Swiggy Instamart economy

"வேகமான நுகர்வு சந்தையில் தங்கள் இருப்பை மட்டுமே உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் ஸ்விகி இன்ஸ்டா மார்ட், பிளிங் இட், செஃப்டோ நிறுவனங்களால், சிறு விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த நிறுவனங்கள் நம்ப முடியாத அளவுக்கு சலுகை விலைகளில் பொருட்களை விநியோகிப்பதோடு, இலவசங்களை அள்ளி வீசி வருகின்றனர். அதேபோல குறிப்பிட்ட பொருட்களை தங்கள் செயலி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு அந்த பொருட்களை பிற வணிகர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிடைக்காத வண்ணம் செய்து பிற விற்பனையாளர்களை ஒடுக்கி வருகின்றனர்.

இந்த செயலால் நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் அதிகமான சிறு விற்பனையாளர்கள், சில்லரை வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. எனவே இந்த டிஜிட்டல் சந்தைகளை மதிப்பீடு செய்து உரிய முறையில் ஒழுங்கு படுத்த வேண்டும்" என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் விற்பனை 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1999ம் ஆண்டு Rediff.com, IndiaMART ஆகியவை இணையதளம் வழியாக விற்பனையை தொடங்கின. 2000ம் ஆண்டு ebay தளம் இந்தியாவின் முதன்மையான இணையதள விற்பனை தளமாக இருந்தது. 2007-2008ம் ஆண்டு இந்த விற்பனை தளம் புதிய உச்சத்தை தொட்டது. காரணம் Flipkart, Snapdeal போன்றவை உள்ளே நுழைந்தன. இருந்தாலும் ஆல்லைன் வியாபாரத்தில் ஒரு குறை இருந்தது. எல்லா தரப்பு மக்களாலும் இதை அணுக முடியவில்லை என்பதுதான் அந்த பிரச்சனை.

2013-2014ம் ஆண்டுகளில் ஸ்மார்ட் போன்களின் வருகை உச்சத்தை எட்டுகிறது. இதனையடுத்து செல்போன் டேட்டா சர்வீஸை கொடுக்கும் இடத்திற்கு ஜியோ வருகிறது. தரமான நெட்வொர்க் மற்றும் ஸ்மார்ட் போன்களின் வருகை ஆன்லைன் வணிகத்தை அனைத்து தரப்பு மக்களுக்குமானதாக மாற்றுகிறது. Amazon India, Myntra, Jabong நிறுவனங்கள் இந்த காலத்தில்தான் நுழைய தொடங்குகின்றன. Cash on Delivery (COD) வசதியும் இவர்கள் காலத்தில்தான் தொடங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக Swiggy, Zomato, BigBasket ஆகியவை இணைய சந்தைக்குள் நுழைகின்றன. இன்று உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக சந்தையாக இந்தியா உருவாகியிருக்கிறது. இன்றைய தேதியில் இதன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. இதுவே 2026ல் ரூ.17 லட்சம் கோடியாகவும், 2030ல் ரூ.32 லட்சம் கோடியாகவும் உயரும். இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய இணைய வர்த்தக தளமாக மாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+