காங். செயற்குழு மாற்றியமைப்பு- தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ், உ.பி.க்கு பிரியங்கா நியமனம்
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். உ.பி. மாநில பொறுப்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு எதிராக அக்கட்சியில் அண்மையில் மூத்த தலைவர்கள் அதிருப்தி குரலை வெளிப்படுத்தினர். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இது எதிரொலித்தது.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் உரிய நேரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும் என இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கூறியிருந்தார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுவை மாற்றி அமைத்துள்ளா சோனியா காந்தி.

செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்
சோனியா, மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஹரீஷ் ராவத், கேசி வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, முகுல் வாஸ்னிக், உம்மன் சாண்டி, அஜய் மாகென், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம். ஜிதேந்திர சிங், தாரிக் அன்வார், ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, கல்ங்கம், ரகுவீர் சிங் மீனா, தருண் கோகாய் உள்ளிட்ட 16 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு, நிரந்தர அழைப்பாளர்கள்
திக்விஜய்சிங், மீரா குமார், ஆதிர் ரஞ்சன் செளத்ரி, ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், அவினாஷ் பாண்டே, முனியப்பா, பிரமோத் திவாரி, தாரிக் ஹமீத் கர்ரா, பவன்குமார் பன்சால், ரஜனி பாட்டீல், பி.எல். புனியா, ஆர்.பி.என்.சிங், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் உள்ளிட்ட 22 பேர் செயற்குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகவும் தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட 10 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்
காங்கிரஸ் கட்சியில் 9 புதிய பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங். பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், புதுவை, கோவா மாநிலங்களுக்கு தினேஷ் குண்டுராவ் மேலிடப் பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார்.

ஒடிஷா பொறுப்பாளர் செல்லக்குமார்
தமிழகத்தின் செல்லக்குமார் எம்.பி, ஒடிஷா மாநில மேலிடப் பொறுப்பாளராகவும் தெலுங்கானா மாநில பொறுப்பாளராக மாணிக்கம் தாகூரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான இக்குழுவில் கரூர் லோக்சபா எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications