மகாராஷ்டிரத்தில் சிவசேனா ஆட்சி அமைக்கிறதா?.. பாஜக அல்லாத ஆட்சி அமைக்க வியூகம்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைய சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மாநில சட்டசபையில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிபெரும்பான்மை பெறாததால் கூட்டணி ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்துவிட்டது.

முதல்வர் பதவி
இவை இரண்டும் சேர்ந்து 161 இடங்களை பெற்றுள்ளதால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகம் உள்ளதால் ஆட்சி அமைக்கலாம். ஆனால் சிவசேனாவோ தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள் முதல் முதல்வர் பதவியில் பங்கு கேட்டு வருகிறது.

வாக்குறுதிகள்
அதாவது இரண்டரை ஆண்டுகள் பாஜகவும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் ஆட்சி அமைக்க வேண்டும் என கோருகிறது. ஆனால் பாஜகவோ இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சிவசேனாவிடம் தாங்கள் அத்தகைய வாக்குறுதிகளை ஏதும் கொடுக்கவில்லை என பாஜக கூறுகிறது.

பாஜக ஆதரவு
மேலும் 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர் என தேவேந்திர பட்னவீஸ் கூறி வருகிறார். நவம்பர் 7-ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடும் என பாஜக கூறுகிறது. காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.

மூத்த தலைவர்கள்
அது போல் கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி வரவிடாமல் தடுத்தது போல் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்புதல் பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர்.

பாஜகவை ஆதரிக்க மாட்டோம்
இதனிடையே தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில் எந்தவொரு கட்சியும் எனக்கு தீண்டதகாதவை அல்ல. பாஜக ஆளுநர் ஆட்சியை பற்றி பேசுகிறது. ஆனால் அதற்காக தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. நாங்கள் ஒரு போதும் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவு இல்லை
எனவே சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசனை செய்ய சோனியா காந்தியை என்சிபியின் சரத் பவார் சந்தித்து பேசுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றனர். பாஜகவுக்கு என்சிபியும் காங்கிரஸும் ஆதரவளிக்காத நிலையில் சிவசேனா ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.

கர்நாடக அரசியல்
அதே நேரத்தில் பாஜக ஆட்சியை விட்டு கொடுக்காமல் சிவசேனாவுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் கொடுக்க பேரம் பேசப்படலாம் என்றும் தெரிகிறது. கர்நாடகத்தில் மஜதவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டு பின்னர் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களின் அதிகார போட்டியால் அங்கு ஆட்சி கவிழ்ந்ததையும் சிவசேனா நினைவில் கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறியுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications