வரலாறு பேசும் இதை.. மோடி, அமித்ஷாவை விடாமல் துரத்த போகும் ராகுலின் புகைப்படம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.கடந்த வாரம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் சிபிஐ தலைமையகம் முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
ஒரு புகைப்படம்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலீஸ் நிலையத்தில் இருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி உள்ளது. இது பல அரசியலை பேசும் சக்தி வாய்ந்த புகைப்படமாக பார்க்கப்பட உள்ளது.
|
கேள்வி கேட்கும்
இந்த புகைப்படம் மோடியையும், அமித் சாவையும் விடாமல் துரத்தும். நியாயம் நீதி பற்றி பேசியதற்காக உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சிதலைவர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளார், என்று இவர் கூறியுள்ளார்.
|
அதே போராட்டம்
முன்பு பிரிட்டிசார் செய்த தவறுகளை எதிர்த்து போராடியதால் காங்கிரஸ் கட்சியினர் சிறை சென்றனர். இப்போது ஆளும் பாஜக செய்யும் தவறுகளை எதிர்த்தாலும் ராகுல் கைதாகி உள்ளார். அப்போது பிரிட்டிஷிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைத்தது. அதேபோல் இப்போதும் பாஜகவிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்றுள்ளார் இவர்.
|
கடைசி நான்கு வருடம்
ராகுல் காந்தி கடைசி நான்கு வருடத்தில் தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வைத்துள்ளார். தற்போது மோடியின் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். இவர் இப்போது ஒழுங்குபடுத்தும் விஷயங்கள் லோக் சபா தேர்தலிலும் பல்வேறு மாநில தேர்தலிலும் அவருக்கு உதவும் என்றுள்ளார்.