Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதச்சார்பின்மை, சோசலிசம் எங்கே? அரசியல் சாசன முன்னுரை குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசியல் சாசன முன்னுரையிலிருந்து 'மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' உள்ளிட்ட சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.

ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

Congress criticizes whether the words secularism and socialism have been removed from the preamble of the Constitution

இதனால் பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோர் பழைய நாடாளுமன்றத்திலிருந்து புதிய நாடாளுமன்றத்திற்கு இடம்பெயர்ந்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவித்ததிலிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டதும் விவாதத்திற்கு உள்ளானது.

இப்படி இருக்கையில் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்த எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளில் முன்னுரையில் 'மதச்சார்பின்மை', 'சமதர்மம்' சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பின் புதிய நகல்களில் மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' உள்ளிட்ட சொற்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பின்னர் இந்த வார்த்தைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளில் முன்னுரையில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவர்களின் (மத்திய அரசின்) நோக்கம் சந்தேகத்திற்குறியதாக இருக்கிறது. இந்த திருத்தம் மிகவும் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நான் இந்த பிரச்னை குறித்து விவாதங்களை எழுப்ப முயற்சித்தேன். ஆனால், எனக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

பல்வேறு இந்துத்துவா மற்றும் வலதுசாரி அமைப்புகள் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து இந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அதற்கேற்றார் போல அரசியல் சாசன பிரதிகளில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+