மதச்சார்பின்மை, சோசலிசம் எங்கே? அரசியல் சாசன முன்னுரை குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி
டெல்லி: அரசியல் சாசன முன்னுரையிலிருந்து 'மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' உள்ளிட்ட சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

இதனால் பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோர் பழைய நாடாளுமன்றத்திலிருந்து புதிய நாடாளுமன்றத்திற்கு இடம்பெயர்ந்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவித்ததிலிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டதும் விவாதத்திற்கு உள்ளானது.
இப்படி இருக்கையில் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்த எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளில் முன்னுரையில் 'மதச்சார்பின்மை', 'சமதர்மம்' சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பின் புதிய நகல்களில் மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' உள்ளிட்ட சொற்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பின்னர் இந்த வார்த்தைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளில் முன்னுரையில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவர்களின் (மத்திய அரசின்) நோக்கம் சந்தேகத்திற்குறியதாக இருக்கிறது. இந்த திருத்தம் மிகவும் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நான் இந்த பிரச்னை குறித்து விவாதங்களை எழுப்ப முயற்சித்தேன். ஆனால், எனக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
பல்வேறு இந்துத்துவா மற்றும் வலதுசாரி அமைப்புகள் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து இந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அதற்கேற்றார் போல அரசியல் சாசன பிரதிகளில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications