Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் பத்திரம், ரஃபேல், பெகாசஸ்.. பாஜக அரசின் மெகா ஊழல்கள் மீது விசாரணை- காங்கிரஸ் பரபர வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசின் 10 ஆண்டுகால தேர்தல் பத்திரம், ரஃபேல் விமானங்கள் கொள்முதல், பெகாசஸ் உளவு விவகாரம் ஆகிய ஊழல் முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் விசாரணை நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. புதிய கல்விக் கொள்கை மறுபரிசீலனை, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி நிலையங்கள் வன்கொடுமைக்குள்ளாவதைத் தடுக்க ரோஹித் ரெமுலா சட்டம் கொண்டுவரப்படும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் ரூ400 ஆக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Congress Election Manifesto Promises will probe dubious deals of BJP Govt

மேலும் பாஜக அரசின் 10 ஆண்டுகால ஊழல்கள் பட்டியலிடப்பட்டு இவை தொடர்பாகவும் விசாரிக்கப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக் காலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டு கேட்பு கருவிகள் வாங்கப்பட்டன. தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டு கட்சிகளுக்கு நன்கொடைகள் பெற வழிவகை செய்யப்பட்டது. நாட்டின் வங்கிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் நாட்டைவிட்டே தப்பி ஓடினார்கள்.. இந்த விவகாரங்கள் அனைத்தும் குறித்தும் அதாவது 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது காங்கிரஸின் இந்த தேர்தல் அறிக்கை.

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் மத்திய அரசின் சட்டமே செல்லாது என அண்மையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருந்தது. பணமதிப்பிழப்பின் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கறுப்பு பணம் இன்னமும் ஒழிக்கப்படவும் இல்லை- வெளிநாட்டில் இருந்து மீட்கப்படவும் இல்லை. ஆகையால் இவை குறித்து விசாரணை நடத்தப்படும் என்கிறது காங்கிரஸ்.

மேலும் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்ட நிலையில் பாஜகவில் இணைந்ததால் அந்த வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. இத்தகைய வழக்குகள் மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் விசாரிக்கப்படும் என்பதும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+