பாஜக கனவில் மண் அள்ளி போடுதே.. காஷ்மீரிலும் காங்கிரஸ், என்சி, பிடிபி சுமூக தொகுதி உடன்பாடு!
டெல்லி: "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சுமூகமான தொகுதி உடன்பாட்டை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகுமாம்.
"இந்தியா" கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அத்துடன் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தப்பி ஓடினார். உ.பி.யில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக அணிக்கு தாவியது.

இதனால் லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணி எதிர்கொள்ளுமா? "இந்தியா" கூட்டணி உயிர்ப்போடு இருக்குமா? என ஆரூடங்கள் கிளம்பின. இதற்கு பதிலடி தரும் வகையில் 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் அதிரடியாக தொகுதி பங்கீட்டு முடிவை அறிவித்தன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வலிமையாக இருப்பதால் தனித்தே போட்டியிட முடிவெடுத்தன. உத்தரப்பிரதேசத்திலும் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் சுமூகமாக தொகுதி உடன்பாட்டை எட்டின.
தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆந்திராவில் இடதுசாரிகளுடன் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஷர்மிளா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸிம் வலிமையான கட்சிகள் என்பதால் தனித்தே போட்டியிடுகின்றன.
இதேபோல ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய முதல் கட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்தார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி இடைவிடாமல் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தற்போதைய நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3, காங்கிரஸ் 2, மக்கள் ஜனநாயகக் கட்சி 1 இடத்தில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகுமாம். பாஜக கனவில் இவ்வளவு மண்ணையா அள்ளி போடும் காங்கிரஸ்!
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications