லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை மீது காகிதங்களை கிழித்து வீச்சு.. 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்
டெல்லி: சீன ஊடுருவல் விவகாரம் பற்றி லோக்சபாவில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்த காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் மேஜை மீது ஏறி ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக எம்பிக்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் அவையில் அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் உள்பட மொத்தம் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். லோக்சபாவும் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் நேற்று லோக்சபாவில் தொடங்கியது. அப்போது டோக்லாம் விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே நினைவு குறிப்பில் உள்ளதாக கூறி ராகுல் காந்தி பேச முயன்றபோது இது சபை விதியை மீறுவதாக ஆளும் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ராகுல் காந்தியை தொடர்ந்து பேசவிடாமல் அமித்ஷா, கிரன் ரிஜிஜு உள்ளிட்டோர் குறுக்கிட்டு பதில் அளித்ததால் எதிர்க்கட்சிகள் சபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று லோக்சபா மீண்டும் கூடியது. அப்போதும் என்.டி.ஏ கூட்டணி எம்பி பேசுவதற்கு தான் அனுமதிக்கப்பட்டது.
இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மேஜை மீது ஏறி ஆவணங்களை கிழித்து அவை தலைவர் இருக்கை மீது எறிந்தார். இதையடுத்து பாஜக எம்பிக்கள் காங்கிரஸ் எம்பிக்கள் மீது குற்றச்சாட்டு வைத்தனர். மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என கிரன் ரிஜிஜூ தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது எதிர்க்கட்சி எம்பிக்கள் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங், ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, பிரசாந்த் யாதவ்ராவ் படோலே மற்றும் கிரண் குமார் ரெட்டி, சு வெங்கடேசன் என 8 எம்பிக்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இவர்கள் 8 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் பங்கேற்க முடியாது. மேலும் லோக்சபாவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்படி லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ரஜினி பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் புதிய பஞ்சாயத்தை இழுத்த ஆதவ்! மாணிக்கம் தாகூர் கடும் கோபம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications