இது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்.. காங்.தேர்தல் அறிக்கை பற்றி ப.சி, மன்மோகன் சிங் பேச்சு!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அறிக்கையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தெரிவித்து இருக்கிறார்
டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அறிக்கையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தெரிவித்து இருக்கிறார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட 15 முக்கிய உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினார்கள்.

ப. சிதம்பரம் வாக்கு
ப. சிதம்பரம் தனது பேச்சில், நாம் கடந்த 5 வருடங்களில் மொத்தம். 4.70 கோடி வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். வேலைவாய்ப்பு பெரிய பிரச்சினையாகியுள்ளது. அதனால் நாங்கள் வேலைவாய்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம். லட்சக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன பேசினார்
வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனையில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம். முக்கியமாக விவசாயிகளின் கடன் குறித்து தேர்தல் அறிக்கை முக்கிய ஒன்றாக இருக்கும். காங். தேர்தல் அறிக்கை விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும்.

மக்கள்
இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையை மக்கள்தான் முழுக்க முழுக்க தயாரித்து இருக்கிறார்கள். அதனால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அறிக்கையாக இந்த அறிக்கை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, என்று குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங் பேச்சு
மன்மோகன் சிங் தனது பேச்சில், இதற்கு முன்பு இல்லாத அளவு பொருளாதாரத்தை உயர்த்தும் தேர்தல் அறிக்கை. அனைத்து தரப்பு மக்கள் நலனையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை. மக்களின் பொருளாதார தேவையை மொத்தமாக பூர்த்தி செய்யும் அறிக்கையாக இது இருக்கும், என்று குறிப்பிட்டார்.
-
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!












Click it and Unblock the Notifications