Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஏழைகளை மீள முடியா கடனில் தள்ளும் ஆன்லைன் நிறுவனங்கள்..' byjusஐ மறைமுகமாக சாடும் கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் ஏழைக் குடும்பங்களை குறிவைத்து மோசமான மார்க்கெடிங் யுக்தியில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கார்த்தி சிதம்பரம், ஆட்டோ டெபிட் மூலம் வட்டிக்கு விடுபவர்களைப் போல ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் நடந்து கொள்வதாகவும் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் குறித்துப் பேசினார்.

ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து, வட்டிக்கு விடுபவர்களைப் போல நடந்துகொள்வதாகவும் சாடியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இது தொடர்பாக பேதசிய கார்த்தி சிதம்பரம், "பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதன் பாடத்திட்டங்கள் முழுமையாக அரசு அமைப்புகள் மூலம் சோதிக்கப்படுகின்றன. அதன் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

கல்விக்கான பட்ஜெட்டை விட அதிகம்

கல்விக்கான பட்ஜெட்டை விட அதிகம்

இருப்பினும், இன்றைய தினம் சில ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இன்னும் சொல்லப்போனால் சில நிறுவனங்களின் மதிப்பு என்பது நமது நாடு கல்விக்காக ஒதுக்கும் நிதியை காட்டிலும் அதிகம். இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடத்திட்டங்களை யாரும் கண்காணிப்பதில்லை. அதில் என்ன கருத்துகள் உள்ளன, அவற்றின் தரம் என்ன உள்ளிட்டவற்றை யாரும் பரிசோதிப்பது இல்லை. அதேபோல அந்த பாடத்திட்டங்களைக் கற்றுக்கொடுப்பவர்களின் தகுதிகள் என்ன என்பது கூட யாருக்கும் தெரிவதில்லை.

மோசமான மார்கெட்டிங் யுக்தி

மோசமான மார்கெட்டிங் யுக்தி

இவை மிக மோசமான மார்கெட்டிங் யுக்தியில் களமிறங்குகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இவர்கள் குறி வைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறையை அளிக்க வேண்டும் என்று விரும்பும் ஏழை பெற்றோரைக் குறி வைக்கும் இவர்கள், அவர்களை இதுபோன்ற கோர்ஸ்களை வாங்க வைக்கிறார்கள். மேலும், ஒரு முறை கோர்ஸ்களை சேர்ந்த பின்னர், ஆட்டோ டெபிட் மூலம் இவர்களைத் தொடர்ந்து அந்த பிடியிலேயே வைத்துள்ளனர். அதில் இருந்து வெளியே வர முயன்றாலும் விடுவதில்லை. இதில் சில நிறுவனங்கள் வட்டிக்கு விடுபவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.

சர்வதேச நிறுவனங்கள்

சர்வதேச நிறுவனங்கள்

சர்வதேச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்ற நிறுவனங்களைக் கண்காணிக்க கல்வித்துறை அமைச்சகம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுக்க வேண்டும். நாட்டிலுள்ள பல சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே இது குறித்து புகார் எழுப்பியுள்ளனர். ஆனால், இந்த பெருநிறுவனங்கள் இதுபோன்ற புகார்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுகின்றன.

Recommended Video

    Hindi தெரியாது! Karti Chidambaram on his Parliaments Speech | OneIndia Tamil
    இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்

    இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்

    இந்த நிறுவனம் தற்போது இந்திய கிரிக்கெட் அணியைக் கூட ஸ்பான்சர் செய்கிறது. நான் எந்த நிறுவனத்தைச் சொல்கிறேன் என அனைவருக்கும் தெரியும். அந்த நிறுவனத்தின் பதிப்பு மட்டும் 21 மில்லியன் டாலர். இது இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த பட்ஜெட்டை காட்டிலும் அதிகம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    யாரை சொல்கிறார்

    கார்த்தி சிதம்பரம் byjus என்ற ஆன்லைன் கல்வி நிறுவனத்தைக் குறித்து வைத்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் தனது ட்விட்டரில், "டியூஷன் வகுப்புகள் இப்போது மிரட்டி பணம் பறிக்கும் தொழில். பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைக் குறிவைத்து, சூழ்ச்சி மார்க்கெட்டிங் மூலம் அவர்களைக் கடன் சுழற்சியில் தள்ளுகிறார்கள். கல்வியை மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிடக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இதைத் தடுக்க அரசு உரியச் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+