ரபேலில் முழுமையாக ஆவணங்கள் திருடு போகவில்லை.. பாதிதான் மிஸ்ஸானது.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதி ஆவணங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது, உண்மையான முழு ஆவணங்கள் வெளியாகவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதி ஆவணங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது, உண்மையான முழு ஆவணங்கள் வெளியாகவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.
ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பேட்டி
நிர்மலா சீதாராமன் தனது பேட்டியில், காங்கிரஸ் தலைவர் இந்த ஆவணங்களில் பாதியை கூட படித்து இருக்க மாட்டார். ஆனால் அதற்குள் எதோ முழு தீர்ப்பு வந்துவிட்டது போல பேசுகிறார். அதேபோல் ''காவலாளிதான் திருடன் ('Chowkidaar chor hai,')'' என்று நீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் காந்தி கூறுகிறார். ரபேல் குறித்த ராகுலின் கருத்துக்கள் எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

அனில் அம்பானி
அனில் அம்பானி மோடிக்கு பணம் கொடுத்ததாக ராகுல் காந்தி கூறுகிறார். நீதிமன்றம் அப்படி கூறவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றம் அப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறதா? நீதிமன்றம் சொல்லாத ஒரு விஷயத்தை ராகுல் காந்தி சொல்வது மிகப்பெரிய அவமதிப்பு.

ரபேல் உண்மை
ரபேல் குறித்த முழு ஆவணங்கள் வெளியாகவில்லை. சில ஆவணங்களை மட்டுமே வெளியிட்டு இருக்கிறார்கள்; அதுவும் ஆவணங்களை கட் செய்து முழுமையாக வெளியிடாமல் மறைத்து இருக்கிறார்கள். ரபேல் ஆவணங்கள் சட்ட விரோதமான முறையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

என்ன ஆவணங்கள்
ரபேல் ஒப்பந்தத்தில் சில குறிப்பிட்ட ஆவணங்கள் மட்டுமே திருடப்பட்டு இருக்கிறது. நாங்கள் மக்களை தவறாக வழி நடத்தவில்லை. நாங்கள் நீதிமன்றத்தில் பொய் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் பொய் சொல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. காங்கிரஸ்தான் மக்களை தவறாக வழி நடத்துகிறது, என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications