காங்கிரஸுக்கு புது பிளட் கன்ஃபார்ம்? தலைவர் தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்த ப.சிதம்பரம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் முதல் வாக்கைப் பதிவு செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 24 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக உள்ளார். இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் மற்றும் டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 9,000 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்கின்றனர். கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பகுதியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல் நபராக வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் வாக்களித்தனர். இத்தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இன்று காலையில் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர் வெற்றி பெற நானும் வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து வாக்களித்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். அரசியல் கட்சிகளிலேயே தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துகிற ஒரே ஒரு கட்சி காங்கிரஸ் மட்டும்தான் என்றார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வாக்களித்த அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார், கர்நாடகாவில் இன்று மொத்தம் 490 பேர் வாக்களிக்கின்றனர். இது ஒருவரலாற்று சிறப்புமிக்க தருணம். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படையாக நடைபெறுகிறது. இதுதான் நாட்டுக்கும் நல்லது என்றார்.

இத்தேர்தலில் வாக்களித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இத்தேர்தல் இருக்கும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 19-ந் தேதிக்குப் பின்னரும் சோனியா காந்தி குடும்பத்துடனான நல்லுறவு தொடரும் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications