காங்கிரஸுக்கு புது பிளட் கன்ஃபார்ம்? தலைவர் தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்த ப.சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் முதல் வாக்கைப் பதிவு செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 24 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக உள்ளார். இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் மற்றும் டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 9,000 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்கின்றனர். கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பகுதியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Congress presidential elections: P Chidambaram casts first vote

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல் நபராக வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் வாக்களித்தனர். இத்தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இன்று காலையில் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர் வெற்றி பெற நானும் வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.

Congress presidential elections: P Chidambaram casts first vote

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து வாக்களித்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். அரசியல் கட்சிகளிலேயே தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துகிற ஒரே ஒரு கட்சி காங்கிரஸ் மட்டும்தான் என்றார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வாக்களித்த அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார், கர்நாடகாவில் இன்று மொத்தம் 490 பேர் வாக்களிக்கின்றனர். இது ஒருவரலாற்று சிறப்புமிக்க தருணம். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படையாக நடைபெறுகிறது. இதுதான் நாட்டுக்கும் நல்லது என்றார்.

Congress presidential elections: P Chidambaram casts first vote

இத்தேர்தலில் வாக்களித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இத்தேர்தல் இருக்கும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 19-ந் தேதிக்குப் பின்னரும் சோனியா காந்தி குடும்பத்துடனான நல்லுறவு தொடரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+