மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக...காங்கிரஸ் ஆட்சி மாநிலங்களில் புதிய மசோதா!!
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வகையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் புதிய மசோதா அறிமுகம் செய்யும் பணியில் மாநில அரசுகள் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதாக்களை காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று அந்தக் அக்ட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் இந்த மசோதாவுக்கான வரைவு நகல் ஒன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை சிறப்பு சட்டபேரவையை கூட்டி நிறைவேற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய சட்டத்தின் மூலம் மறுக்காமல் வழங்குவதற்கு இந்த புதிய மசோதா உதவும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு விவசாயிகள் உரிமை மற்றும் சிறப்பு பாதுகாப்பு மசோதா 2020 என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் மாநிலத்தில் எப்போது விவசாய சட்டம் அமல்படுத்தப்படும் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக எந்த தனியாரும் தானியங்களை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை கடுமையாக காங்கிரஸ் கட்சி எதிர்த்து இருந்தது. இந்த நிலையில் விவசாயிகளை காப்பாற்றுவதற்கு இந்த மசோதா உதவும் என்று கருதுகிறது. மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு இருந்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications