ஜோதிராதித்ய சிந்தியா, மும்பை தலைவர் மிலிந்த் தியோரா அடுத்தடுத்து ராஜினாமா.. காங்கிரஸ் நிலை பரிதாபம்
டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகி உள்ளார். மேலும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களான தீபக் பபாரியா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர். இவர்கள், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவிகளை துறந்துள்ளனர்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, முதல்வர் பதவிக்கான ரேசில் கமல்நாத்துடன் போட்டியில் இருந்தவர், ஜோதிராதித்ய சிந்தியா. ஆனால், கமல்நாத் பக்கம் காங்கிரஸ் தலைமை சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் மிலிந்த் தியோரா இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இப்பதவியில் நியமிக்கப்பட்டவர் இவர். ஆனால், கட்சியின் மோசமான தோல்விக்கு, பொறுப்பேற்று பதவியை துறந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சியை உறுதிப்படுத்த தேசிய அளவில் பங்களிப்பு வழங்குவதே எனது திட்டம். கட்சியை ஒன்றிணைக்கும் பணிக்காக, நான் மும்பை தலைமை பொறுப்பை ஏற்றேன். ஆனால், ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் இந்த பதவிக்கு, ராஜினாமா செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன், என்று தியோரா கூறினார்.
அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, பதவி விலகுவதாக அறிவித்திருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதே பதவியில் நீடிப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மே 25ம் தேதி ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications