Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திகாரில் பாதுகாப்பு இல்லை.. சிறை அதிகாரிகளால் உயிருக்கு ஆபத்து! சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திகார் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரில் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் எப்போதும் கோடிக்கணக்கான சொத்துக்களை அடைய கனவு காண்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவர்.

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் ஆசையில் 17 வயது முதலே யாரையாவது ஏமாற்றி பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டார். 2007ஆம் ஆண்டு தான் ஒரு உயர் அதிகாரி என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ75 கோடியை பெற்றுள்ளார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அது போல் 2017ஆம் ஆண்டு அமமுக பொதுச் செயலாளர் தினகரனிடம் 50 கோடியை லஞ்சமாக பெற முயற்சித்தார். இந்த வழக்கில தினகரனின் புகாரின் பேரில் சுகேஷ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். ஜெயிலில் இருந்தாலும் மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி ரூ 200 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார்.

 குற்றப்பத்திரிகை

குற்றப்பத்திரிகை

இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுகேஷ். மனைவி லீனா மரிய பால் மற்றும் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் சிறையில் சுகேஷிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு சொகுசு வசதிகளை 82 சிறை அதிகாரிகள் செய்து கொடுத்ததாக பொருளாதார குற்றப்பிரிவு புகார் அளித்துள்ளது.

 சுகேஷின் உயிருக்கு ஆபத்து

சுகேஷின் உயிருக்கு ஆபத்து

இந்த நிலையில் சுகேஷின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் அசோக் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி திகார் சிறையில் காவலர்களால் தாக்கப்பட்டார். இதையடுத்து சுகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 உயிருக்கு பல முறை ஆபத்து

உயிருக்கு பல முறை ஆபத்து

சிறையில் சுகேஷின் உயிருக்கு பல முறை ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து சுகேஷ் கடந்த மார்ச் 9ஆம் தேதி ஹரி நகர் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் சிறை துறை அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கடிதம் எழுதியும் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை.

சிறை துறையினர் மீது புகார்

சிறை துறையினர் மீது புகார்

சிறை துறையினருக்கு எதிராக சுகேஷ் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு சுகேஷை அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். கடந்த மே 13 ஆம் தேதி சுகேஷ் வலது கை வலியால் கடுமையாக அவதிப்பட்டார். அவரது ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ் ரே எடுத்தபோது அவரது காலில் ஒரு ஜவ்வு கிழிந்திருந்தது கண்டறியப்பட்டது என டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சுகேஷ் சார்பில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். இது குறித்து கடந்த 6 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் வழக்கு பட்டியலிடப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+