திகாரில் பாதுகாப்பு இல்லை.. சிறை அதிகாரிகளால் உயிருக்கு ஆபத்து! சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு புகார்
டெல்லி: திகார் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் எப்போதும் கோடிக்கணக்கான சொத்துக்களை அடைய கனவு காண்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவர்.
எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் ஆசையில் 17 வயது முதலே யாரையாவது ஏமாற்றி பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டார். 2007ஆம் ஆண்டு தான் ஒரு உயர் அதிகாரி என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ75 கோடியை பெற்றுள்ளார்.

டிடிவி தினகரன்
அது போல் 2017ஆம் ஆண்டு அமமுக பொதுச் செயலாளர் தினகரனிடம் 50 கோடியை லஞ்சமாக பெற முயற்சித்தார். இந்த வழக்கில தினகரனின் புகாரின் பேரில் சுகேஷ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். ஜெயிலில் இருந்தாலும் மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி ரூ 200 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார்.

குற்றப்பத்திரிகை
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுகேஷ். மனைவி லீனா மரிய பால் மற்றும் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் சிறையில் சுகேஷிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு சொகுசு வசதிகளை 82 சிறை அதிகாரிகள் செய்து கொடுத்ததாக பொருளாதார குற்றப்பிரிவு புகார் அளித்துள்ளது.

சுகேஷின் உயிருக்கு ஆபத்து
இந்த நிலையில் சுகேஷின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் அசோக் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி திகார் சிறையில் காவலர்களால் தாக்கப்பட்டார். இதையடுத்து சுகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு பல முறை ஆபத்து
சிறையில் சுகேஷின் உயிருக்கு பல முறை ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து சுகேஷ் கடந்த மார்ச் 9ஆம் தேதி ஹரி நகர் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் சிறை துறை அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கடிதம் எழுதியும் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை.

சிறை துறையினர் மீது புகார்
சிறை துறையினருக்கு எதிராக சுகேஷ் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு சுகேஷை அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். கடந்த மே 13 ஆம் தேதி சுகேஷ் வலது கை வலியால் கடுமையாக அவதிப்பட்டார். அவரது ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ் ரே எடுத்தபோது அவரது காலில் ஒரு ஜவ்வு கிழிந்திருந்தது கண்டறியப்பட்டது என டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சுகேஷ் சார்பில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். இது குறித்து கடந்த 6 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் வழக்கு பட்டியலிடப்படவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications