Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தமில்லாமல் இந்தியா சாதனை.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மருத்துவத் துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் முறையாக, கொரோனாவுக்கு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிட கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை இன்று காலை 2,76,583 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 9,985 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நாட்டில் முதல் முறையாக ஆக்டிவாக உள்ள, அதாவது சிகிச்சையிலுள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையைவிட அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை

குணமடைந்தோர் எண்ணிக்கை

இதுவரை மொத்தம் 1,35,206 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 1.33 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, நாட்டில், கொரோனாவால், 7,745 நோயாளிகள் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 279 நோயாளிகள் இறந்துள்ளனர்.

உலகளவில் 5வது இடத்தில் இந்தியா

உலகளவில் 5வது இடத்தில் இந்தியா

இதுவரை 50 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு பிறகு, கொரோனா கேஸ்களில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஒரே நாளில் இந்தியா 9,000க்கும் மேற்பட்ட கேஸ்களை தொடர்ந்து 8வது நாளாக பதிவு செய்துள்ளது.

குணமடையும் விகிதம்

குணமடையும் விகிதம்

இதுவரை 50 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு பிறகு, கொரோனா கேஸ்களில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஒரே நாளில் இந்தியா 9,000க்கும் மேற்பட்ட கேஸ்களை தொடர்ந்து 8வது நாளாக பதிவு செய்துள்ளது.

குணமடையும் விகிதம்

குணமடையும் விகிதம்

இருப்பினும், குணமடைவோர் விகிதம் அதிகமாக இருப்பது முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள, மகாராஷ்டிராவில் இதுவரை சமூக பரவல் நிலை இல்லை என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

சீனாவைவிட அதிகம்

சீனாவைவிட அதிகம்

டிசம்பர் மாதம் வுஹான் நகரில் கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால், சீனாவில் 84,000-க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும், 90,000 கேஸ்கள் உள்ளன. உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகெங்கிலும் மோசமடைந்து வருவதாகக் கூறியுள்ளது. எனவே, மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+