சத்தமில்லாமல் இந்தியா சாதனை.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை
டெல்லி: இந்திய மருத்துவத் துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் முறையாக, கொரோனாவுக்கு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிட கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை இன்று காலை 2,76,583 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 9,985 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நாட்டில் முதல் முறையாக ஆக்டிவாக உள்ள, அதாவது சிகிச்சையிலுள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையைவிட அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை
இதுவரை மொத்தம் 1,35,206 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 1.33 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, நாட்டில், கொரோனாவால், 7,745 நோயாளிகள் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 279 நோயாளிகள் இறந்துள்ளனர்.

உலகளவில் 5வது இடத்தில் இந்தியா
இதுவரை 50 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு பிறகு, கொரோனா கேஸ்களில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஒரே நாளில் இந்தியா 9,000க்கும் மேற்பட்ட கேஸ்களை தொடர்ந்து 8வது நாளாக பதிவு செய்துள்ளது.

குணமடையும் விகிதம்
இதுவரை 50 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு பிறகு, கொரோனா கேஸ்களில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஒரே நாளில் இந்தியா 9,000க்கும் மேற்பட்ட கேஸ்களை தொடர்ந்து 8வது நாளாக பதிவு செய்துள்ளது.

குணமடையும் விகிதம்
இருப்பினும், குணமடைவோர் விகிதம் அதிகமாக இருப்பது முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள, மகாராஷ்டிராவில் இதுவரை சமூக பரவல் நிலை இல்லை என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

சீனாவைவிட அதிகம்
டிசம்பர் மாதம் வுஹான் நகரில் கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால், சீனாவில் 84,000-க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும், 90,000 கேஸ்கள் உள்ளன. உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகெங்கிலும் மோசமடைந்து வருவதாகக் கூறியுள்ளது. எனவே, மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications