இந்த 5 மாநிலங்கள்தான் ரொம்ப டென்ஷனை கொடுக்குது.. மொத்தம் 56% நோயாளிகள்.. கவலையா இருக்கு!
5 மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது
டெல்லி: இந்தியாவிலேயே தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில்தான் கொரோனாவைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறது. மொத்த புதிய தொற்றாளர்களில் இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 56 சதவீதமாகும்.
நாட்டின் கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்த ஐந்து மாநிலங்கள்தான் பெரும் சுமையை சுமந்து கொண்டுள்ளன. இந்தியாவில் புதிதாக பதிவான 69,921 தொற்றாளர்களில் 56 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 819 இறப்புகளில் 65.4 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள்தான் இவை. இங்குதான் அதிக அளவில் கொரோனாவைரஸ் பரவல் இருக்கிறது. உயிரிழப்புகளும் இங்குதான் அதிகமாக உள்ளது.
மொத்தம் உள்ள 7 லட்சத்து 85 ஆயிரத்து 996 கேஸ்களில் 62.2 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேசமயம், 24 மணி நேரத்தில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்த மாநிலங்களே முன்னணியில் உள்ளன. அந்த அளவானது 58 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாதான் பட்டியலில் டாப்பில் உள்ளன. இவற்றின் நோய்த் தொற்று எண்ணிக்கை மட்டும் 48.6 சதவீதம் ஆகும்.
மகாராஷ்டிராவில் நோயால் பாதிக்கப்பட்டோர் சதவீதம் 24.7 சதவீதமாக உள்ளது. மரணங்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக உள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாபிலும் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முறையே 52, 49 ஆக அவை இருந்தன.
டெல்லியைப் பொறுத்தவரை இதுவரை அங்கு 4444 பேர் உயிரிழந்துள்ளனர். இது உபியை விட அதிகமாகும். உத்தர பிரதேசத்தில் 3486 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெல்லியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், உபியில் 63 பேர் இறந்தனர்.
இந்தியாவில் மொத்தம் உள்ள 36 லட்சத்து 91 ஆயிரத்து 166 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்களில் 60 சதவீதம் மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் உள்ளன. இதில் மகாராஷ்டிராவின் பங்கு மட்டும் 21 சதவீதமாகும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications