டெல்லியில் 97 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர்? செரோ சர்வேயில் அதிர்ச்சி தகவல்!
டெல்லியில் 6-வது செரோ சர்வே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது
டெல்லி: டெல்லியில் 6-வது செரோ சர்வே நடத்தப்பட்டது.. அதில், 97 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்..
சீனாவில் உருவான கொரோனாவைரஸ் உலக நாடுகளை மிரட்டி கொண்டிருக்கிறது.. இப்போதைக்கு நமக்குள்ள ஒரே சஆறுதல் தடுப்பூசி மட்டுமே. எனவே, அதனை செலுத்தி கொள்ள அந்தந்த நாடுகள் தற்காப்பு நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருகின்றனர்.
எனவே, ஓரளவு தொற்று குறைந்து வருகிறது.. இந்த நிலையில் கொரோன வைரஸ் தற்போது வேறு ரூபத்தில் உருமாறியுள்ளது..
அதற்கு டெல்டா பிளஸ் என்று பெயரிட்டுள்ளனர் நிபுணர்கள்... இது முன்பு இருந்த வைரஸை விட கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா பிளஸ்
டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்று அழைக்கப்படும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. AY.4.2 எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா என்பது குறித்து ஐசிஎம்ஆர், எம்சிடிவிஆய்வு செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த தாக்கம் பெங்களூருவில் 2 பேரிடம் தென்பட்டதாக முதலில் செய்திகள் வந்த நிலையில், அதுகுறித்தும் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை
இதனிடையே, டெல்லியில் 6-வது செரோ சர்வே நடத்தப்பட்டது.. அதில், 97 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.. 28 ஆயிரம் மாதிரிகளை கொண்டு இந்த செரோ சர்வே நடத்தப்பட்டது... ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கும் மேற்பட்டோரில் 98 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிப்பு
தலைநகர் டெல்லியை பொறுத்தவரை, தொற்று ஓரளவு குறைந்து வருகிறது.. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 40ஆக உயர்ந்துள்ளது.. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிப்பு
இதனால், டெல்லியில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 14 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 345 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்... சமயம், கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது.. நேற்று முன்தினம் யாருமே தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை.. இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 91 என்ற அளவில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications