கொரோனாவால் பலியானோரில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 75%
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோரில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 75% என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி கொரோனாவால் பலியானோரில் 75.3% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42.2% ; 60 வயது முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் 33.1% ஆகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83% நீரிழிவு, உயர் அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 10.3%; 45 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 14.4%. இந்தியாவில் தற்போது கொரோனாவால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 30% அளவுக்கு தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா உருவாகி உள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரப்படி தமிழகத்தில் 84% பேருகும் டெல்லியில் 63% பேருக்கும் டெல்லி ஒன்று கூடலால் கொரோனா ஏற்பட்டது.
இது உத்தரப்பிரதேசத்தில் 59%; ஆந்திராவில் 61%; அஸ்ஸாமில் 91%; அந்தமான் நிக்கோபரில் 83% ஆக உள்ளது. பீகாரின் பாட்னா, மேற்கு வங்கத்தின் நாடியா, ஹரியானாவின் பானிபட் ஆகிய மாவட்டங்களில் 14 நாட்களாக எந்த பாதிப்புமே இல்லை.












Click it and Unblock the Notifications